செய்திகள் :

சென்னை: ஆபாச பதிவு.. பெண்ணுக்கு காதல் டார்ச்சர் கொடுத்த நீச்சல் பயிற்சியாளர் கைது

post image

சென்னை ராஜமங்கலம் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நீச்சல் பயற்சியாளர் பாலாஜி என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக நாங்கள் இருவரும் பழகிவந்தநிலையில் பாலாஜி, என்னைக் காதலிப்பதாகக் கூறினார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அதனால் என்னுடைய பெயரில் சமூகவலைதளங்களில் போலி கணக்கு ஒன்றை உருவாக்கி அதில் ஆபாச போட்டோஸ்களை பதிவு செய்து வருகிறார் பாலாஜி. எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் ராஜமங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

பாலாஜி

புகார் கொடுத்த பெண் கொடுத்த தகவலின்படி சைபர்க்ரைம் போலீஸாரின் உதவியோடு அந்த சமூகவலைதளங்களின் கணக்குகளை ஆய்வு செய்தனர் ராஜமங்கலம் போலீஸார். அப்போது பாலாஜிதான் அந்தப் பெண்ணின் பெயரில் போலி சமூகவலைதள கணக்குகளை உருவாக்கியது தெரிந்தது.

இதையடுத்து பாலாஜியைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அந்தப் பெண்ணை தான் காதலித்தாகவும் ஆனால் அவர் தன்னுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால்தான் ஆத்திரத்தில் அந்தப் பெண்ணை பழிவாங்க இப்படி செய்துவிட்டதாக பாலாஜி தெரிவித்தார்.

இதையடுத்து நீச்சல் பயிற்சியாளர் பாலாஜியை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஐபோன் உள்பட 3 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைது
கைது

இதுகுறித்து ராஜமங்கலம் போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட பாலாஜி, நீச்சல் பயிற்சியாளராக இருந்து வருகிறார். அந்தவகையில்தான் புகார் கொடுத்த பெண்ணிடம் பாலாஜி பழகியிருக்கிறார்.

தன்னுடைய காதலை பாலாஜி அந்தப் பெண்ணிடம் வெளிப்படுத்தியதும் அவர் அதை ஏற்கவில்லை. அதனால் அந்தப் பெண்ணை பழிவாங்க திட்டமிட்ட பாலாஜி, அந்தப் பெண்ணின் புகைப்படங்களை பயன்படுத்தி சமூகவலைதள கணக்குகளைத் தொடங்கி அதில் ஆபாசமாக பதிவு செய்திருக்கிறார். அதோடு அந்தப் பெண்ணின் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து அதில் பதிவு செய்திருக்கிறார். அதைப்பார்த்த சிலர் அந்தப் பெண்ணுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதன்பிறகே எங்களிடம் அந்தப் பெண் புகாரளித்தார். தற்போது பாலாஜியை கைது செய்திருக்கிறோம். அவரின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

சென்னை: அதிமுக பெண் நிர்வாகிக்கு ஆபாச சைகை; காவலர் மீது வழக்கு பதிவு.. நடந்தது என்ன?

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகியான 33 வயது பெண் கடந்த 30-ந்தேதி நள்ளிரவு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளைப் பின்தொடர்ந்து வந்தவர், திடீரென ... மேலும் பார்க்க

துபாய் டிராவல்ஸ் அதிபருக்கு கோவையில் ஸ்கெட்ச் - குடும்பத்தோடு சிக்கிய காதலி; பகீர் பின்னணி

திருவாரூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சிகாமணி (47). சிகாமணிக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவி உள்ளார். சிகாமணி துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இதனிடையே சிகாமணி கடந்த ஏப்ரல் மாதம் கடைசிய... மேலும் பார்க்க

குறிவைக்கப்படும் முதியவர்கள்; மேற்கு மண்டலத்தில் தொடரும் ஆதாயக் கொலைகள்; பின்னணி என்ன?

மேற்கு மண்டலத்தின் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.இந்த இரண்டு மாவட்டங்களிலும் பெரும்பாலானவை கிராமப் பகுதிகளாக உள்ளதால், விவசாயிகள் தோட்டத்து வீட்டில் அதி... மேலும் பார்க்க

பள்ளி மதிய உணவில் விழுந்த பாம்பு; சாப்பிட்ட 100 மாணவர்கள் பாதிப்பு! - NHRC விசாரணை, நடந்தது என்ன?

மதிய உணவுத் திட்டம் கல்வி மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியமானது. இதில் நடைபெறும் தவறுகள் நிறைய குழந்தைகளின் உயிருக்கும், உடல்நலத்துக்கும் ஆபத்து விளைவிக்கும். அரசு திட்டங்களை பாதுகாப்புடன் செ... மேலும் பார்க்க

சென்னை: காதலிக்க மறுத்த மாணவி... பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ஐடி ஊழியர் - அதிர்ச்சி சம்பவம்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர், தாழம்பூர் காலல் நிலையம் பின்புறத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். மாணவியைச் சந்திக்க அவர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பாஜக அமைச்சர் பங்கஜா முண்டே-க்கு ஆபாச `மெசேஜ்' அனுப்பியவர் கைது; சைபர் கிரைம் விசாரணை

மகாராஷ்டிராவில் அமைச்சராக இருக்கும் பங்கஜா முண்டே-க்கு கடந்த சில நாள்களாக மர்ம நபர் ஒருவர் அடிக்கடி போன் செய்து ஆபாசமாக பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தான். அதோடு பங்கஜா முண்டேயின் போனுக்கு ஆபாச மெசேஜ்களை... மேலும் பார்க்க