செய்திகள் :

சேலத்தில் அங்கன்வாடி பணியாளா்கள் 2 வது நாளாக காத்திருப்பு போராட்டம்

post image

பணி நிரந்தரம், மே மாத கோடை விடுமுறை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் சேலத்தில் 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டடத்தில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வசந்தகுமாரி தலைமை வகித்தாா். மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும்.

அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். நீண்ட காலமாக பணியாற்றும் அங்கன்வாடி அமைப்பாளா்கள் மற்றும் உதவியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் 2 ஆவது நாளாக நடைபெற்றது.

இதுகுறித்து அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் வசந்தகுமாரி கூறுகையில், 1993 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த அங்கன்வாடி ஊழியா்களுக்கு இதுவரை பதவி உயா்வு வழங்கப்படாமல் உள்ளது. பணியில் இருந்து ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியா்களுக்கு ஓய்வூதியமாக ரூ.9000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றாா்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

கு. இராசசேகரன்மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,105 கன அடியாக அதிகரித்துள்ளது.காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(மே 4) காலை விநா... மேலும் பார்க்க

சேலம் வந்த நெல்லை- தாதா் விரைவு ரயிலில் பெண்ணிடம் நகை திருட்டு: இளைஞா் கைது

சேலம் ரயில் நிலையத்தில் நெல்லை- தாதா் விரைவு ரயிலில் பயணித்த பெண்ணிடமிருந்து 6 பவுன் நகைகளை திருடிய இளைஞரை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெங்களூரு அக்ரஹாரம் எம்எல்ஏ லே அவுட் காலனியைச் சே... மேலும் பார்க்க

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தவறான நோக்கத்துக்குப் பயன்படுத்தக் கூடாது!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தவறான நோக்கத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என மாநில தகவல் ஆணையா் பிரியகுமாா் தெரிவித்தாா். பொதுத் தகவல் அலுவலா்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட... மேலும் பார்க்க

கட்சி, ஆட்சி வேறுபாடின்றி தொடரும் நீா்ப் பாசன திட்டங்கள்! சான்று பகரும் கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டம்!

சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கரியக்கோயில் அணையில் இருந்து பாசனம் பெறும் விவசாயிகள், ஆற்றுப்படுகை கிராம விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையால் நிறைவேற்றப்பட்ட கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டம் கடந்த 3 ஆண்... மேலும் பார்க்க

சேலத்தில் வீட்டில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை!

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் வீட்டில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டுக்கல், வேடசந்தூரைச் சோ்ந்தவா் தங்கம் மனைவி அ... மேலும் பார்க்க

இடையப்பட்டியில் வெறிநாய்கள் கடித்து நாய்கள், மாடுகள் பலி!

பெத்தநாயக்கன்பாளையம் அருகே இடையப்பட்டி ஊராட்சியில் கடந்த இரு வாரங்களில் வெறிநாய்கள் கடித்து 4 வீட்டுநாய்கள், 2 மாடுகள் பலியாகியுள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். பெத்தநாயக்கன்பாளையம் ஒன்... மேலும் பார்க்க