செய்திகள் :

மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பாக்ஸ் விலை அதிரடி உயர்வு! கேம் பிரியர்கள் அதிர்ச்சி

post image

உலகளவில் விடியோ கேம் பிரியர்கள் அதிகம் பயன்படுத்தி வரும் எக்ஸ்பாக்ஸ் விலையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிரடியாக உயர்த்தியுள்ளது.

எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ், எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் ஆகியவற்றின் விலை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உயர்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் எக்ஸ் பாக்ஸ் சீரிஸ் எஸ் ரகத்தின் விலை 80 டாலர்கள் உயர்ந்துள்ளது. விலையேற்றத்தைத் தொடர்ந்து 379.99 டாலருக்கு எக்ஸ் பாக்ஸ் சீரிஸ் எஸ் விற்பனையாகிறது.அதற்கு அடுத்த மேம்பட்ட ரகமான எக்ஸ் பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் 100 டாலர் விலை உயர்த்தப்பட்டு 599.99 டாலருக்கு விற்கப்படுகிறது.

எக்ஸ் பாக்ஸ் மட்டுமில்லாது அவற்றுடன் வாங்கப்படும் ஹெட்செட்கள், வயர்லெஸ் கண்ட்ரோலர்கள் உள்ளிட்ட பிற சாதனங்களின் விலையும் ஏற்றத்தைக் கண்டுள்ளன.

இந்த அதிரடி விலையேற்றத்துக்கு முக்கிய காரணமாக அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையே சுட்டிக்காட்டப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு தாக்கத்தால், மைக்ரோசாஃப்ட் மட்டுமில்லாது சோனி நிறுவனமும் அண்மையில் தங்களது தயாரிப்பான ப்ளேஸ்டேசன் 5-இன் விலை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, நிடேண்டோ நிறுவனத்தின் ஸ்விட்ச் 2-இன் விலையும் ஏற்றத்தை கண்டுள்ளது.

சிறு நாணய அளவிலான பேட்டரி அறிமுகம்: ஒருமுறை சார்ஜ் செய்தாலே 50 ஆண்டுகள் நீடிக்கும் திறன்!

ஒருமுறை சார்ஜ் செய்தாலே சுமார் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் திறன் வாய்ந்த புது வகையான பேட்டரியை மின்னணு பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர். சீனாவைச் சேர்ந்த பீட்டாவோல்ட் நிறுவனம் அணுசக்தியால் இயங்கும் திறனுள... மேலும் பார்க்க

இந்தியாவில் ரூ.85,000 கோடி முதலீடு செய்யும் ஜியோஸ்டார்! யூடியூபை மிஞ்சுமா?

இந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறையின் வரலாற்றில் முன்னிருக்கும் பெரிய அறிவிப்பாக, ஜியோஸ்டார் (JioStar) நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் $10 பில்லியன் (சுமார் ரூ. 85,000 கோடி) அளவுக்கு உள்ளடக்க தயா... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதாக ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!

மும்பை: ஒழுங்குமுறை இணக்கங்களில் குறைபாடுகளுக்காக ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 2 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி இன்று அபராதம் விதித்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.வங்கிகளில் சைபர் ப... மேலும் பார்க்க

ஊழியர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தும் நெட்கியர்!

புதுதில்லி : 'நெட்கியர்' நிறுவனம், அடுத்த 12 முதல் 18 மாதங்களில் தனது சென்னை சாப்ட்வேர் டெவலப்மென்ட் சென்டர் குழுவை, 100 நபர்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.தற்போது நெட்ஜியர் இந்தியாவ... மேலும் பார்க்க

தி மிஸ்ஸிங் லிங் நிறுவனத்தை கையகப்படுத்திய இன்போசிஸ்!

புதுதில்லி: ஆஸ்திரேலிய சைபர் செக்யூரிட்டி சேவை நிறுவனமான, 'தி மிஸ்ஸிங் லிங்'-கை சுமார் ரூ.532 கோடி ஒப்பந்தம் மூலம் கையகப்படுத்தியுள்ளதாக இன்போசிஸ் இன்று தெரிவித்துள்ளது.அதன் துணை நிறுவனமான இன்போசிஸ், ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிவு!

மும்பை: தொடர்ச்சியாக அந்நிய நிதி வரத்து மற்றும் வலுவான உள்நாட்டு தரவுகளால் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் இன்று இந்திய ரூபாய் 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிந்தது.ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வ... மேலும் பார்க்க