செய்திகள் :

ADMK vs DMDK: ``வாக்குறுதி கொடுத்தார்கள்... அப்படி ஒன்று நடக்கவே இல்லை'' - முற்றும் கூட்டணி மோதல்!?

post image

தமிழ்நாட்டில் விரைவில் 6 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசியல் கட்சியினர் இடையே ராஜ்யசபா இடம் யாருக்கு என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது தே.மு.தி.க. அ.தி.மு.க-வுடன் அங்கம் வகித்த தே.மு.தி.க-வுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் என அ.தி.மு.க வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

பாமக, தேமுதிக , அதிமுக
பாமக, தேமுதிக , அதிமுக

அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்த போது, அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டை அ.தி.மு.க. ஒதுக்கியது. அன்புமணியின் பதவிக்காலம் முடிவடைவதால் அந்த இடத்தை பெற தே.மு.தி.க. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ராஜ்ய சபா சீட் குறித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறும்போது, ``அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தபோதே தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் என கையெழுத்தானது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தே.மு.தி.க.வின் ராஜ்யசபா வேட்பாளர் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்படும். அ.தி.மு.க. உடனான கூட்டணியில் தே.மு.தி.க தொடர்கிறது" என்றார்.

ஆனால், அ.தி.மு.க. சார்பில் ``இதுவரை தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் குறித்து வாக்குறுதி அளிக்கவில்லை. சீட் குறித்து அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்றே கூறப்பட்டது.

பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமி
பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமி

கடந்த ஆண்டு மார்ச் 20-ந்தேதி அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் 5 எம்.பி. தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் எந்த இடத்திலும் ராஜ்யசபா சீட் பற்றி குறிப்பிடப்படவில்லை" என அ.தி.மு.க தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கும் தே.மு.தி.க-வின் பொருளாளர் எல்.கே.சுதீஷ், ``தே.மு.தி.க-வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அ.தி.மு.க உறு​தி​யாக வாக்குறுதி கொடுத்​தது. இது முழுக்க முழுக்க உண்மை. நேரம் வரும்​போது அனைத்​தை​யும் வெளிப்​படை​யாகச் சொல்​வேன்.

எல்.கே.சுதீஷ்
எல்.கே.சுதீஷ்

அ.தி.​மு.க அளித்த உத்​தர​வாதத்​தால் தான் நான் 2024 மக்​கள​வைத் தேர்​தலில் போட்​டி​யிட​வில்​லை. இதற்கு முன் நான் 2009-ல் கள்​ளக்​குறிச்​சி​யிலும் 2014-ல் சேலத்​தி​லும் போட்​டி​யிட்​டேன். சேலத்​தில் எனக்​காக மோடி பிரச்​சா​ரம் செய்​தார். 2019-ல் மீண்​டும் பா.ஜ.க கூட்​ட​ணி​யில் கள்​ளக்​குறிச்சியில் போட்​டி​யிட்​டேன். 2026 சட்​டப் பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிடு​வது குறித்​தும் யோசிக்கிறேன்." என்றார்.

``அவரது மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது..'' - பத்மஸ்ரீ பாபா சிவானந்த் மறைவுக்கு மோடி இரங்கல்

பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா குரு பாபா சிவானந்த் உடல்நலக் குறைவால் வாரணாசியில் நேற்று (மே 3) இரவு காலமானார். 128 வயதான பாபா சிவானந்துக்கு, ஏப்ரல் 30 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இத... மேலும் பார்க்க

Neet: ஆடையில் நிறைய பட்டன் இருந்ததால் தேர்வு எழுத மறுப்பு.. உடனே பெண் போலீஸ் செய்த நெகிழ்ச்சி செயல்!

2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு ஒரே கட்டமாக இன்று (மே 4) நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். நாடு முழுவதும் 23 லட்சம் மாண... மேலும் பார்க்க

``6 மணி நேர இலக்கை 3 மணி நேரத்தில் அடைந்த ஆம்புலன்ஸ்'' - சிறுவனின் கண் பார்வை காப்பாற்றிய ஓட்டுநர்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவனின் கண்ணில் குத்திய குச்சியை அகற்றிய உள்ளுர் மருத்துவர், அடுத்த 4 மணி நேரத்தில் கோவையில் உள்ள மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளித்தால் பா... மேலும் பார்க்க

மணிப்பூர் சோகம்: `படிப்படியாக நாங்கள் மறக்கப்பட்டோம்' - 2 ஆண்டுகள் முடிந்தும் தொடரும் துயரம்!

இந்திய வரலாற்றின் கருப்பு பக்கங்களில் சிகப்பு எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய வரலாறு மணிப்பூருடையது. மே 3, 2023-ம் ஆண்டு இரு சமூக மக்களுக்கிடையே உள்நாட்டுக் கலவரம் தொடங்கி இன்றுடன் சரியாக இரண்டு ஆண்டு... மேலும் பார்க்க

``நாட்டுக்காக தற்கொலை வெடிகுண்டோடு பாகிஸ்தானுக்குச் செல்வேன்'' - கர்நாடகா அமைச்சர் ஜமீர் அகமது கான்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்குப் பின்னர், பாகிஸ்தான் நடத்திய தீவிரவா... மேலும் பார்க்க

``இந்திய வரலாற்றில் முதல் ஓ.பி.சி பிரதமர் நரேந்திர மோடிதான்..'' - இராம ஸ்ரீநிவாசன்

"முறையான சமூக நீதியை கொண்டு வரவும், அனைவருக்கும் எல்லாம் முறையாக சென்றடையவும் தான் சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் எடுக்கப்பட உள்ளது." என்று பாஜக பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். ... மேலும் பார்க்க