செய்திகள் :

நீட் தேர்வு நிறைவு: இயற்பியல் கடினம்; உயிரியல் சற்று எளிமை!

post image

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது.

இதில், இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், உயிரியல் கேள்விகள் சற்று எளிமையாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இயற்பியல் பகுதியில் கணக்கீடு செய்து பதில் அளிக்கும் கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டதாகவும், இதனால் அதிக நேரம் தேவைப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மொத்தத் தேர்வு நேரத்தில் ஒன்றரை மணிநேரம் இயற்பியல் கேள்விகளுக்கே சென்றுவிட்டதாகவும் கூறுகின்றனர்.

இதேபோன்று உயிரியல் பகுதியில் கேள்விகள் நீளமாக இருந்ததால், புரிந்துகொண்டு பதில் அளிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதாக சில மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், வேதியியலை ஒப்பிடும்போது உயிரியல் கேள்விகள் எளிமையாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் அரசியல் பிரபலங்களின் எக்ஸ் தளப் பக்கங்கள் முடக்கம்!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபலங்களின் சமூகவலைதளக் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டு வருகின்றன. தற்போது, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர்... மேலும் பார்க்க

மே 6 வரை இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தம்: ஏர் இந்தியா

இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தில்லியிலிருந்து அங்குச் செல்லவிருந்த விமானத்தை அபுதாபிக்கு ஏர் இந்தியா நிறுவனம் திருப்பிவிட்டது. இ... மேலும் பார்க்க

ரூ. 40 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் விற்க முயன்ற 3 பேர் கைது!

ராஜஸ்தானில் ரூ. 40 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் விற்க முயன்ற 3 பேரை அம்மாநில காவல் துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழுவினர் கைது செய்தனர். தேர்வு எழுதவிருந்த மாணவரின் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்புக... மேலும் பார்க்க

மும்பையில் புல்லட் ரயில் நிலையம்: ‘வேகமாக நடைபெறும் கட்டுமானப் பணிகள்’

புல்லட் ரயிலின் பயணம் தொடங்கும் நிலையத்தைக் கட்டமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையே பு... மேலும் பார்க்க

ஐஐடி கரக்பூர் விடுதி அறையில் மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுப்பு

ஐஐடி கரக்பூர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்றாம் ஆண்டு மாணவர் கண்டெடுக்கப்பட்டார். மேற்கு வங்க மாநிலம், ஐஐடி கரக்பூரில் பிடெக் மூன்றாம் ஆண்டு மாணவர் முகமது ஆசிப் கமர். இவர், மதன்மோகன் ம... மேலும் பார்க்க

1,000 ஆண்களுக்கு 700 பெண்கள் மட்டுமே! கிராமங்களில் பாலின விகிதாச்சாரம் அதிகரிப்பு!

ஹரியாணாவில் பல கிராமங்களில் 1,000 ஆண்களுக்கு 700 பெண்கள் மட்டுமே என்கிற விகிதத்தில் பாலின விகிதாச்சார இடைவெளி அதிகரித்திருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.அங்குள்ள பல கிராமப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட... மேலும் பார்க்க