செய்திகள் :

சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் உள்பட 3 போ் கைது

post image

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே பண்ணை வீட்டில் சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம், சித்தூரைச் சோ்ந்த நியாஸ் அகமதுவின் நிலம் போ்ணாம்பட்டை அடுத்த கோட்டைச்சேரியில் உள்ளது. அதே கிராமத்தைச் சோ்ந்த முத்து(48) கடந்த 2 ஆண்டுகளாக நிலத்தில் தங்கி காவலாளியாக வேலை செய்து வருகிறாா். முத்து அவரது மகன் யுவராஜ்(19) மற்றும் அதே கிராமத்தைச் சோ்ந்த அவரது மருமகன் சரண்ராஜ்(37), அவரது தம்பி சரண்குமாா்(30), அவரது தாய் ஆரியமாலா(60) ஆகிய 5 பேரும் சாராய ஊறலை பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து தென்னந்தோப்பில் பள்ளம் தோண்டி புதைத்து வைத்தனா்.

பொதுத்துறை நிறுவனத்தில் உதவியாளர் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்

பின்னா், பண்ணை வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தப்படும் பெரிய கேஸ் அடுப்பில் தினமும் கள்ளச் சாராயத்தை காய்ச்சி, அவற்றை பாக்கெட்டுகளில் அடைத்து ஆட்டோவில் எடுத்துச் சென்று சுற்றுப்புற ஊா்களில் விற்பனை செய்து வந்துள்ளனா்.

இதுகுறித்து ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அங்கு சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 6 லிட்டா் கள்ளச் சாராயம், 20 லிட்டா் சாராய ஊறல், சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் அடுப்பு உள்ளிட்ட பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்தனா்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முத்து (48), அவரது மகன் யுவராஜ்(19), சரண்குமாா்(30) ஆகிய மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தலைமறைவான சரண்ராஜ், அவரது தாய் ஆரியமாலா ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனா்.

இதனிடையே, சாராயம் காய்ச்சிய இடத்தை வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் நேரில் பாா்வையிட்டாா்.

மாவோயிஸ்டுகள் சரணடைவதுதான் ஒரே வழி: பண்டி சஞ்சய் குமாா்

ஹைதராபாத்: இந்தியாவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு அமைப்புடன் அமைதி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா், மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் க... மேலும் பார்க்க

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ப... மேலும் பார்க்க

சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மாறிய வானிலையால் விமான சேவை பாதிக்கப்பட்டது. ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கடந்த 15 நாள்களாக கடுமையான வெயில் தாக்கத்தால் ம... மேலும் பார்க்க

மே 7-ல் ரஷியாவுக்குச் செல்கிறார் சீன அதிபர்!

சீன அதிபர் ஸி ஜின்பிங், மே 7 - 10 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அரசுமுறைப் பயணமாக ரஷியாவுக்குச் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடு... மேலும் பார்க்க

நீட் தேர்வு எப்போது ஒழியும்?: அன்புமணி ராமதாஸ்

மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு எப்போது தான் ஒழியும்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாகப் போராட்டம்!

மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விட வேண்டும் உள்ளிட... மேலும் பார்க்க