செய்திகள் :

பயங்கரவாத அச்சுறுத்தல்: லண்டனில் ஈரானைச் சேர்ந்த பலர் கைது!

post image

லண்டனில் தாக்குதல் நடத்தவிருந்ததாக ஈரான் நாட்டைச் சேர்ந்த பலரை இங்கிலாந்து பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.

லண்டனில் பெயர் குறிப்பிடப்படாத இடத்தில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து இங்கிலாந்து காவல் துறை தெரிவித்துள்ளதாவது,

லண்டனில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட முயன்றதாக ஈரானைச் சேர்ந்த 5 பேர் சனிக்கிழமை (மே 3) கைது செய்யப்பட்டனர். இவர்களின் வயது 29 - 45க்குள் இருக்கும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதேபோன்று ஈரான் குடியுரிமை வைத்திருந்த மேலும் 4 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்தது.

இதோடுமட்டுமின்றி, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக லண்டனில் சுற்றித்திரிந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த 39, 44 மற்றும் 55 வயதுடைய மேலும் மூவரை இன்று கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இவர்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் குறிப்பிடப்படாத இடத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியிருந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டை பாதுகாக்கும் வகையில் காவல் துறை மற்றும் உளவு அமைப்புகள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஹவுதி தாக்குதல்!

இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எதிர்பாராத ... மேலும் பார்க்க

ஹூஸ்டனில் குடும்ப விருந்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 14 பேர் காயம்

ஹூஸ்டனில் குடும்ப விருந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார், 14 பேர் காயமுற்றனர். அமெரிக்காவின், தென்கிழக்கு ஹூஸ்டனில் உள்ள செர்ரி ஹில் பகுதியில் துப்பாக்கிச் சூடு தொடர்பான அழைப்புகள் ஹூஸ... மேலும் பார்க்க

சிங்கப்பூர் தேர்தல்: தொடர்ச்சியாக 14-ஆவது முறையாக ஆளுங்கட்சி வெற்றி! பிரதமர் மோடி வாழ்த்து

சிங்கப்பூா் நாடாளுமன்ற தோ்தல் சனிக்கிழமை நடந்து முடிந்த நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆளுங்கட்சியான பிஏபி கட்சி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.மொத்தமுள்ள 97... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய தோ்தல்: மீண்டும் பிரதமா் ஆகிறாா் ஆன்டனி ஆல்பனீஸ்

ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் ஆளும் தொழிலாளா் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளதால், அந்த நாட்டின் பிரதமராக ஆன்டனி ஆல்பனீஸ் மீண்டும் தோ்ந்தெடுக்கப்படுவது உறு... மேலும் பார்க்க

‘உலகத் தலைவா்களின் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது’

ரஷியாவில் நடைபெறும் 80-ஆவது ஆண்டு வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்லும் உலகத் தலைவா்கள் தங்கள் தாக்குதலில் கொல்லப்படமாட்டாா்கள் என்று உத்தரவாதம் தர முடியாது என்று உக்ரைன் அதிபா் வொ... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் நடந்து முடிந்தது தோ்தல்

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு தோ்தல் சனிக்கிழமை நடந்து முடிந்தது. மொத்தம் 211 வேட்பாளா்கள் போட்டியிட்ட இந்தத் தோ்தலில் ஏராளமான வாக்காளா்கள் வாக்களித்தனா். இது குறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க