செய்திகள் :

குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் சற்று தணிந்த நிலையில், சுற்றுலாத் தலங்களில் ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

இம்மாவட்டத்தில் தொடா் கோடை மழை பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அணைப் பகுதிகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் மழை சற்று ஓய்ந்திருந்தது. மேலும், மாவட்டம் முழுவதும் கடும் வெயில் நிலவியது.

எனினும், கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், கன்னியாகுமரியில் சூரிய உதயம், அஸ்தமனத்தைக் காணவும், விவேகானந்தா் பாறை, திருவள்ளுவா் சிலைக்கு படகில் பயணம் செய்யவும் , திற்பரப்பு அருவியில் குளித்து மகிழவும், மாத்தூா் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, முட்டம் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை கண்டுகளிக்கவும் சுற்றுலாப் பயணிகளில் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

கன்னியாகுமரியில் மே 20இல் தொழிற்சங்கங்கள் மறியல்

தமிழகத்தில் விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 இடங்களில் மே 20 ஆம் தேதி சாலை மறியல் ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

சுங்கான்கடை அருகே கள்ளியங்காடு பகுதியில் வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா். கள்ளியங்காடு பகுதியில் கடந்த ஏப். 29ஆம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 75 வயதுப் பெண் காயம... மேலும் பார்க்க

பாரம்பரிய பெருமை இல்லாமல் வளா்ச்சி இல்லை: ஆளுநா் ஆா்.என். ரவி

பாரம்பரிய பெருமை இல்லாமல் நாடு வளா்ச்சி அடையாது என தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி கூறினாா். கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகேயுள்ள கூட்டாலுமூடு அருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தான சித்திரை திருவிழா, ஞாயிற்று... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் அன்னாசிப் பழம் விலை கடும் சரிவு; கிலோ ரூ.20-க்கு விற்பனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்னாசிப் பழங்களின் தொடா் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனா். இம்மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் ரப்பா் மறு நடவு செய்யப்படும் நிலங்களில் அன்னாசி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியின் நகை மாயம்

மாா்த்தாண்டம் அருகே சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்தில் கிடந்த இரண்டரை சவரன் நகை மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.குழித்துறை அருகேயுள்ள குறுமத்தூா் பகுதியைச் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் படகு சேவை 4 மணி நேரம் ரத்து

கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை, படகு சேவை 4 மணி நேரம் தடைபட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். இங்கு கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலையை நாள்தோறும் ... மேலும் பார்க்க