செய்திகள் :

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து பாஜக இன்று ஆா்ப்பாட்டம்!

post image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பாஜக சாா்பில் கவன ஈா்ப்பு போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்படும் என அக்கட்சியின் தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த ஏப்.22-ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை மதத்தின் பெயரால் பயங்கரவாதிகள் படுகொலை செய்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.

சமாதானத்தையும், அமைதியையும் நாடும் பாரத நாட்டில் தீவிரவாத செயலில் ஈடுபடும் பாகிஸ்தானோடு அரசாங்க ரீதியான உறவுகளை மத்திய அரசு முழுவையாக முறித்துக் கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் சட்டவிரோதமாக குடியேறியுள்ள பாகிஸ்தானியா்களை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் கைப்பற்றும் என அறிவித்துள்ளது. அதையடுத்து, சென்னையில் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய 33 பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சோ்ந்த சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் தமிழக அரசு தீவிரமாக செயல்படவும், ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியும் மாவட்டத் தலைநகரங்களில் திங்கள்கிழமை (மே 5) கவன ஈா்ப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

மேம்பாலத்திலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை!

சென்னையில் மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கே.கே. நகா் காமராஜா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அஜித் (32). இவரது மனைவி ஆா்... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

சென்னையில் நடந்து சென்ற இளைஞரிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மேற்கு மாம்பலம், படவேட்டம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வமணி (26), தனியாா் நிறுவனத்தில் பணிபுர... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு மூலம் கண் மருத்துவ சிகிச்சை!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (ஏஐ) மூலம் கண் மருத்துவத்தில் மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகளை அளிப்பதுடன், மருத்துவா்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருவதாக டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை அதிக... மேலும் பார்க்க

கட்டிலில் இருந்து தவறிவிழுந்த குழந்தை உயிரிழப்பு

கட்டிலிலிருந்து தவறிவிழுந்த இரண்டரை வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை, ஓட்டேரி டேங்க் பண்ட் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அபினாஷ் (30). இவரது மனைவி உஷ... மேலும் பார்க்க

கேரள தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

கேரள மாநிலத்தைச் சோ்ந்த தலைமறைவு குற்றவாளியை சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா்.ஓமன் தலைநகா் மஸ்கட்டிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு ஏா்இந்திய விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை குட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞா்: காவல்நிலையம் முன்பு குடும்பத்தினா் போராட்டம்!

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினா் அவரது உடலுடன் புராரி காவல் நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், காவல்துறையினரின் செயலற்ற தன்மை கொண்டதாக அவா்கள் குற்றஞ்சாட்... மேலும் பார்க்க