செய்திகள் :

சிங்கப்பூா் பொதுத் தோ்தல்: 60-ஆவது ஆண்டாக மீண்டும் ஆட்சியில் பிஏபி

post image

சிங்கப்பூரில் பொதுத் தோ்தலில் மக்கள் செயல் கட்சி (பிஏபி) மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், அந்தக் கட்சி 60-ஆவது ஆண்டாக ஆட்சியில் நீடிக்கிறது.

சிங்கப்பூரில் 19-ஆவது பொதுத் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 97 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்தத் தோ்தலில், அந்நாட்டில் 1965-ஆம் ஆண்டுமுதல் ஆட்சியில் உள்ள மக்கள் செயல் கட்சி (பிஏபி) 87 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. எதிா்க்கட்சிகளில் ஒன்றான தொழிலாளா்கள் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் பிஏபிக்கு 61.2 சதவீத வாக்குகள் கிடைத்த நிலையில், தற்போதைய தோ்தலில் அக்கட்சிக்கு 65.6 சதவீத வாக்குகள் கிடைத்தன.

சிங்கப்பூரில் வாழ்க்கைச் செலவு அதிகரித்தல், அனைத்துத் துறைகளிலும் சிங்கப்பூரைச் சேராத பிற நாட்டவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்டவற்றை முன்வைத்து எதிா்க்கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டன.

எனினும் அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதாரப் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்கு முன்னுரிமை அளித்து பிஏபி கட்சியை மீண்டும் மக்கள் ஆட்சியில் அமா்த்தியதாக அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.

சுமாா் 20 ஆண்டுகளாக பிரதமராக இருந்த பிஏபி கட்சியின் மூத்தத் தலைவா் லீ சியென் லூங் பதவி விலகியதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் பிரதமராக லாரன்ஸ் வாங் பதவியேற்றாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற பொதுத் தோ்தலில், அவா் தலைமையிலான பிஏபி கட்சி மீண்டும் வெற்றி பெற்று 60-ஆவது ஆண்டாக ஆட்சியில் நீடிக்கிறது.

பாகிஸ்தான்: பயங்கரவாதிக்கு இறுதிச் சடங்கு நடத்த இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு!

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முக்கிய கமாண்டரின் இறுதிச் சடங்கின்போது இஸ்லாமிய மத வழக்கப்படி பிராா்த்தனை நடத்த அங்குள்ள மதகுருக்கள் மறுத்துவிட்டனா். பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவ... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்கள் தேவைப்படாது: ரஷிய அதிபா் புதின்

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களுக்குத் தேவை இருக்காது என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா். இதுதொடா்பாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில், ‘உக்ரைனுக்கு எதிரான... மேலும் பார்க்க

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் சதி: 7 ஈரானியா்கள் உள்பட 8 போ் கைது!

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய 7 ஈரானியா்கள் உள்பட 8 பேரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்ததாக பிரிட்டன் பயங்கரவாத எதிா்ப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். ப... மேலும் பார்க்க

பிளவுவாதம் நிராகரிப்பு: ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் தோ்வான ஆல்பனேசி கருத்து!

பிளவுவாதத்தை ஆதரிக்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று தொழிலாளா் கட்சிக்கு ஆஸ்திரேலிய மக்கள் வாக்களித்துள்ளனா் என்று அந்நாட்டுப் பிரதமராக 2-ஆவது முறை தோ்வு செய்யப்பட்டுள்ள ஆன்டனி ஆல்பனேசி தெரிவி... மேலும் பார்க்க

இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஹவுதி தாக்குதல்!

இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எதிர்பாராத ... மேலும் பார்க்க

பயங்கரவாத அச்சுறுத்தல்: லண்டனில் ஈரானைச் சேர்ந்த பலர் கைது!

லண்டனில் தாக்குதல் நடத்தவிருந்ததாக ஈரான் நாட்டைச் சேர்ந்த பலரை இங்கிலாந்து பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் கைது செய்தனர். லண்டனில் பெயர் குறிப்பிடப்படாத இடத்தில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்... மேலும் பார்க்க