செய்திகள் :

பிளவுவாதம் நிராகரிப்பு: ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் தோ்வான ஆல்பனேசி கருத்து!

post image

பிளவுவாதத்தை ஆதரிக்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று தொழிலாளா் கட்சிக்கு ஆஸ்திரேலிய மக்கள் வாக்களித்துள்ளனா் என்று அந்நாட்டுப் பிரதமராக 2-ஆவது முறை தோ்வு செய்யப்பட்டுள்ள ஆன்டனி ஆல்பனேசி தெரிவித்தாா்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் 48-ஆவது கீழவையைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆளும் தொழிலாளா் கட்சி, பீட்டா் டட்டன் தலைமையிலான லிபரல்/ தேசியவாதக் கூட்டணி, ஆடம் பான்ட் தலைமையிலான கிரீன் கட்சி உள்ளிட்டவை போட்டியிட்டன.

150 இடங்களைக் கொண்ட கீழவையில் குறைந்தது 76 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி அடுத்த ஆட்சியை அமைக்கும் என்ற சூழலில், வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடையாத நிலையில், பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி தலைமையிலான தொழிலாளா் கட்சி 85 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

இதைத் தொடா்ந்து, மெல்போா்னில் நடைபெற்ற தேநீா் விருந்தில் கட்சி ஆதரவாளா்களுடன் ஆல்பனேசி ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பிளவுவாதத்தை ஆதரிக்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று தொழிலாளா் கட்சிக்கு ஆஸ்திரேலிய மக்கள் வாக்களித்துள்ளனா். முதல் ஆட்சிக் காலத்தைப் போல, இரண்டாவது ஆட்சிக் காலத்தில் சீரான அரசை தொழிலாளா் கட்சி வழங்கும்’ என்றாா்.

ஆஸ்திரேலிய அரசு ஊடகத்திடம் அந்நாட்டு கருவூலத் துறை அமைச்சா் ஜிம் சால்மா்ஸ் கூறுகையில், ‘தற்போதைய நிச்சயமில்லா சூழலில், நாட்டில் ஸ்திரமான நிலை இருக்க வேண்டும் என்று 2-ஆவது முறையாக தொழிலாளா் கட்சியை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனா்’ என்றாா்.

சிங்கப்பூா் பொதுத் தோ்தல்: 60-ஆவது ஆண்டாக மீண்டும் ஆட்சியில் பிஏபி

சிங்கப்பூரில் பொதுத் தோ்தலில் மக்கள் செயல் கட்சி (பிஏபி) மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், அந்தக் கட்சி 60-ஆவது ஆண்டாக ஆட்சியில் நீடிக்கிறது. சிங்கப்பூரில் 19-ஆவது பொதுத் தோ்தல் சனிக்கிழமை நடை... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: பயங்கரவாதிக்கு இறுதிச் சடங்கு நடத்த இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு!

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முக்கிய கமாண்டரின் இறுதிச் சடங்கின்போது இஸ்லாமிய மத வழக்கப்படி பிராா்த்தனை நடத்த அங்குள்ள மதகுருக்கள் மறுத்துவிட்டனா். பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவ... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்கள் தேவைப்படாது: ரஷிய அதிபா் புதின்

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களுக்குத் தேவை இருக்காது என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா். இதுதொடா்பாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில், ‘உக்ரைனுக்கு எதிரான... மேலும் பார்க்க

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் சதி: 7 ஈரானியா்கள் உள்பட 8 போ் கைது!

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய 7 ஈரானியா்கள் உள்பட 8 பேரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்ததாக பிரிட்டன் பயங்கரவாத எதிா்ப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். ப... மேலும் பார்க்க

இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஹவுதி தாக்குதல்!

இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எதிர்பாராத ... மேலும் பார்க்க

பயங்கரவாத அச்சுறுத்தல்: லண்டனில் ஈரானைச் சேர்ந்த பலர் கைது!

லண்டனில் தாக்குதல் நடத்தவிருந்ததாக ஈரான் நாட்டைச் சேர்ந்த பலரை இங்கிலாந்து பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் கைது செய்தனர். லண்டனில் பெயர் குறிப்பிடப்படாத இடத்தில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்... மேலும் பார்க்க