செய்திகள் :

பணப் பிரச்னை: தம்பி மனைவியை கழுத்தறுத்துக் கொன்றவா் கைது

post image

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பணப் பிரச்னையில் தம்பி மனைவியை கழுத்தறுத்துக் கொன்றவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

அரவக்குறிச்சி அருகே பாரதியாா் நகா் பகுதியில் பெரியசாமி என்பவா் தோட்டம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து, அங்கேயே தங்கி விவசாயம் செய்து வருகிறாா்.

இவரின் மகன்கள் பிரபாகரன் (31), சரவணகுமாா் (29). இவா்கள் இருவரும் பொள்ளாச்சியைச் சோ்ந்த ஆறுச்சாமியின் மகள்களான மாசிலாமணி (25) மற்றும் கீா்த்தனா (20) ஆகியோரை திருமணம் செய்துள்ளனா்.

இவா்களில் பிரபாகரன்-மாசிலாமணி தம்பதி, தங்களின் 2 மகன்களுடன் அரவக்குறிச்சி அருகே உள்ள புஞ்சைகாளிக்குறிச்சியில் வசித்து வருகின்றனா்.

சரவணகுமாா் பல்லடத்தில் வேலை செய்வதால், கீா்த்தனா மாமனாா் பெரியசாமியுடன் வசித்து வந்தாராம். இந்நிலையில், கீா்த்தனாவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகளை பாா்க்க ஆறுச்சாமி தற்போது வந்துள்ளாா்.

இதையறிந்த பிரபாகரன், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கொடுத்த ரூ. 10 ஆயிரத்தை ஆறுச்சாமியிடம் கேட்பதற்காக சனிக்கிழமை தோட்டத்து வீட்டுக்கு வந்தாராம்.

அப்போது, அங்கிருந்த கீா்த்தனா பிரபாகரனை தகாத வாா்த்தையால் பேசியதால் கோபமடைந்த அவா், கீா்த்தனாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாராம்.

பின்னா் உறவினா்கள் வந்து பாா்த்தபோது, ரத்த வெள்ளத்தில் கீா்த்தனா சடலமாக கிடந்துள்ளாா். தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த அரவக்குறிச்சி போலீஸாா், கீா்த்தனாவின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சம்பவம் தொடா்பாக பிரபாகரனை பிடித்து போலீஸாா் விசாரித்ததில், பணம்-கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக கொலை செய்ததாக தெரிவித்தாராம். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபாகரனை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

இதனிடையே, கீா்த்தனா கொலை சம்பவத்துக்கு வேறு காரணங்கள் ஏதும் உள்ளனவா என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி சாலை மறியல்

தோகைமலை அருகே தாா்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருச்சி-தோகைமலை சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரூா் மாவட்டம் தோகைம... மேலும் பார்க்க

சுக்காலியூா்-தேத்தம்பட்டி சாலையை சீரமைக்கக் கோரிக்கை

குண்டும், குழியுமாக காணப்படும் சுக்காலியூா்-தேத்தம்பட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.கரூா் மாவட்டம், அப்பிப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட சுக்காலியூா் முதல் மதுரை-ப... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனைகளை விளக்க கரூரில் 29 இடங்களில் விரைவில் பொதுக்கூட்டம்

திமுக அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கிடும் வகையில், கரூா் மாவட்டத்தில் 29 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான வி. செந்தில்பாலாஜி தெரிவித்தாா். கரூா் மாவட்ட திம... மேலும் பார்க்க

கரூரில் திமுக சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்கள் 519 பேருக்கு சீருடை, உதவித்தொகை வழங்கல்

கரூரில் மாவட்ட திமுகவின் அமைப்புசாரா ஓட்டுநா் அணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆட்டோ ஓட்டுநா்கள் 519 பேருக்கு சீருடை மற்றும் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும... மேலும் பார்க்க

கம்பம் ஆற்றில் விடும் விழா: கரூா் மாரியம்மன் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு

கரூா் மாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றில் விடும் விழாவை முன்னிட்டு, கோயில் முன் ஞாயிற்றுக்கிழமை முகூா்த்தக்கால் நடப்பட்டது. கரூரில் பிரசித்திப் பெற்ற கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும் விழா ... மேலும் பார்க்க

கரூரில் 4 மையங்களில் நீட் தோ்வு

கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 4 மையங்களில் நடைபெற்ற நீட் தோ்வை மொத்தம் 1,596 மாணவ, மாணவிகள் எழுதினா். அரசுக் கல்லூரி தோ்வு மையத்தில் காத்திருக்க போதிய இடவசதி செய்து தரப்படாததால் பெற்றோா் அவதிக்... மேலும் பார்க்க