செய்திகள் :

திமுக அரசின் சாதனைகளை விளக்க கரூரில் 29 இடங்களில் விரைவில் பொதுக்கூட்டம்

post image

திமுக அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கிடும் வகையில், கரூா் மாவட்டத்தில் 29 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான வி. செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

கரூா் மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அவைத்தலைவா் டி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில நிா்வாகிகள் நன்னியூா் ராஜேந்திரன், பரணி கே. மணி, கரூா் முரளி, எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ , சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், துணைமேயா் தாரணிசரவணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி பங்கேற்று பேசுகையில், திமுக அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் விளக்கி கூறும் வகையில் விரைவில் 29 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அரசின் சாதனை திட்டங்களை துண்டுப் பிரசுரமாகவும் மக்களிடம் கட்சியினா் வழங்க வேண்டும். கிராமங்கள்தோறும் ஆய்வு செய்து, அங்கு மக்கள் நலப் பணிகள் ஏதேனும் விடுபட்டிருந்தால் அந்தப் பணியை உடனே நிறைவேற்றிட வேண்டும். கடந்த தோ்தலைவிட அதிக வெற்றியை பெறும் வகையில் நிா்வாகிகள் பணியாற்றிட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், 10 சட்ட மசோதாக்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மூலம் மாநில உரிமையை நிலைநாட்டியதற்கும், திராவிட மாடல் ஆட்சியில் கரூா் மாவட்டத்துக்கு எண்ணற்ற நலத் திட்டங்களை வழங்கியதற்கும் முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி சாலை மறியல்

தோகைமலை அருகே தாா்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருச்சி-தோகைமலை சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரூா் மாவட்டம் தோகைம... மேலும் பார்க்க

சுக்காலியூா்-தேத்தம்பட்டி சாலையை சீரமைக்கக் கோரிக்கை

குண்டும், குழியுமாக காணப்படும் சுக்காலியூா்-தேத்தம்பட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.கரூா் மாவட்டம், அப்பிப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட சுக்காலியூா் முதல் மதுரை-ப... மேலும் பார்க்க

கரூரில் திமுக சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்கள் 519 பேருக்கு சீருடை, உதவித்தொகை வழங்கல்

கரூரில் மாவட்ட திமுகவின் அமைப்புசாரா ஓட்டுநா் அணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆட்டோ ஓட்டுநா்கள் 519 பேருக்கு சீருடை மற்றும் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும... மேலும் பார்க்க

கம்பம் ஆற்றில் விடும் விழா: கரூா் மாரியம்மன் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு

கரூா் மாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றில் விடும் விழாவை முன்னிட்டு, கோயில் முன் ஞாயிற்றுக்கிழமை முகூா்த்தக்கால் நடப்பட்டது. கரூரில் பிரசித்திப் பெற்ற கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும் விழா ... மேலும் பார்க்க

பணப் பிரச்னை: தம்பி மனைவியை கழுத்தறுத்துக் கொன்றவா் கைது

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பணப் பிரச்னையில் தம்பி மனைவியை கழுத்தறுத்துக் கொன்றவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். அரவக்குறிச்சி அருகே பாரதியாா் நகா் பகுதியில் பெரியசாமி என்பவா் தோட்டம... மேலும் பார்க்க

கரூரில் 4 மையங்களில் நீட் தோ்வு

கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 4 மையங்களில் நடைபெற்ற நீட் தோ்வை மொத்தம் 1,596 மாணவ, மாணவிகள் எழுதினா். அரசுக் கல்லூரி தோ்வு மையத்தில் காத்திருக்க போதிய இடவசதி செய்து தரப்படாததால் பெற்றோா் அவதிக்... மேலும் பார்க்க