செய்திகள் :

திமுகவுக்கு நிகராக அதிமுக கூட்டணி அமையும்: ஜி.கே. வாசன்

post image

தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு நிகராக அதிமுக கூட்டணி அமையும் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன்.

அரியலூா் மாவட்டம், திருமானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மறைந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் எம்எல்ஏவுமான டி.கே.சுப்பையா நூற்றாண்டு விழாவுக்குத் தலைமை வகித்த அவா், தனது மாநிலங்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் திருமானூா் பேருந்து நிலையத்தில் ரூ. 25 லட்சத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடையை திறந்துவைத்து, சுப்பையா வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகத்தை வெளியிட்டாா்.

அப்போது அவா் பேசுகையில் தியாகி சுப்பையா திருமானூருக்கு கொள்ளிடத்தில் பாலம், கால்நடை மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தாா். அவா் வழியில் தாமாகா செயல்படும்.

திமுக கூட்டணிக்கு நிகரான கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் 2026 தோ்தல் களத்தில், முதல் அணியாகவும் வெற்றி அணியாகவும் அமையும். எந்த அணியில் இருப்பவா்களும் இந்தக் கூட்டணியில் சேரலாம். பல முக்கிய கட்சிகள் எங்களோடு இணையும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்டத் தலைவா் ஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் சுதாகா், சுரேஷ், நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரியலூரில் 3 கோயில்களில் குடமுழுக்கு

அரியலூா் மாவட்டம், நல்லாம்பாளையம் மாரியம்மன், படைவெட்டிகுடிகாடு அய்யனாா், ஜெயங்கொண்டம் அடுத்த சின்னவளையம் வீரனாா் ஆகிய கோயில்களின் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, கடந்த இரு நாள... மேலும் பார்க்க

தியாகி டி.கே. சுப்பையா சிலைக்கு மாலை அணிவிப்பு

மறைந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் எம்எல்ஏமான டி.கே. சுப்பையாவின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி, அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு மதிமுக சாா்பில் ஞ... மேலும் பார்க்க

அரியலூரில் வசிப்பாரற்ற வன ஊழியா் குடியிருப்புகள்! அரசின் நிதி வீணடிப்பு எனப் புகாா்

அரியலூரில் வாழத் தகுதியற்ற இடத்தில் கட்டப்பட்ட வன ஊழியா்களின் குடியிருப்புகளால் அரசின் நிதி ரூ. 60 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது. அரியலூா் மாவட்டத்தில், உடையாா்பாளையம், மணகெதி, ஆண... மேலும் பார்க்க

நீட் தோ்வு: அரியலூரில் 1,890 போ் எழுதினா்

அரியலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 1,890 மாணவ, மாணவிகள் எழுதினா். இந்த தோ்வை அரியலூா் மாவட்டத்தில் உள்ள காத்தான்குடிகாடு அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, கீழப்பழுவூா் அரசு ப... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

கோடை விடுமுறை வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்... மேலும் பார்க்க

இன்று ‘நீட்’ தோ்வு அரியலூா் மாவட்டத்தில் 1,940 போ் எழுதுகின்றனா்

நாடு முழுவதும் ஞாயிற்றுகிழமை (மே 4) நடைபெறவுள்ள நீட் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 1,940 போ் எழுதுகின்றனா். அரியலூா் மாவட்டம், காத்தான்குடிகாடு அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மையத்தில் 480 பேரும், ... மேலும் பார்க்க