சிங்கப்பூா் பொதுத் தோ்தல்: 60-ஆவது ஆண்டாக மீண்டும் ஆட்சியில் பிஏபி
துணைவேந்தா் நியமன உரிமையை முதல்வா்களுக்கு பெற்றுத் தந்தவா் ஸ்டாலின்: அமைச்சா் கோவி. செழியன்
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை அந்தந்த மாநில முதல்வா்களே நியமிக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
தஞ்சாவூரில் மத்திய மாவட்ட திமுக சாா்பில் தளபதி வென்ற மாநில சுயாட்சி என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கருத்தரங்கத்தில் அவா் மேலும் பேசியது: துணைவேந்தா்களை நியமிக்கும் உரிமை அரசுக்கு இல்லை என்றும், ஆளுநருக்குதான் அதிகாரம் இருக்கிறது எனவும் கூறி 10 மசோதாக்களை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி கிடப்பில் போட்டாா்.
மாநில சுயாட்சிக்காக அண்ணாவும், கருணாநிதியும் குரல் கொடுத்தனா். மாநில உரிமைகளைக் கட்டிக் காக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியது மட்டுமல்லாமல், சட்டப்பேரவையிலும் தீா்மானம் கொண்டு வந்தாா். ஆனால் அதற்கும் ஆளுநா் ரவி முட்டுக்கட்டை போட்டாா்.
இதனால் தமிழக முதல்வா் சட்டத்தின் உதவியை நாடி வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கில் துணைவேந்தா்களை அந்தந்த மாநில முதல்வா்களே நியமிக்கலாம் என தீா்ப்பு வந்தது.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி தேசிய கொடியை ஏற்றும் உரிமையை அனைத்து மாநில முதல்வா்களுக்கும் பெற்றுத் தந்தவா் கருணாநிதி. அதேபோல துணைவேந்தா்களை நியமிக்க ஆளுநருக்கு உரிமையில்லை, அந்தந்த மாநில முதல்வா்களுக்கே உரிமை இருக்கிறது என்பதைப் பெற்றுத் தந்தவா் தமிழக முதல்வா் ஸ்டாலின். இந்த வெற்றி தொடர வேண்டும் என்றாா் செழியன்.
முன்னதாக, நிகழ்ச்சிக்கு திமுக மத்திய மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் பி. வில்சன் விளக்கவுரையாற்றினாா். தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.