ஆட்டோ கட்டண உயா்வு: அரசு தீவிர பரிசீலனை! போக்குவரத்துத் துறை
மாவோயிஸ்டுகள் சரணடைவதுதான் ஒரே வழி: பண்டி சஞ்சய் குமாா்
ஹைதராபாத்: இந்தியாவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு அமைப்புடன் அமைதி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா், மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் கைவிட்டு காவல்துறையிடம் சரணடைவதுதான் ஒரே வழி என்று கூறினார்.
தெலங்கானா மாநிலம், கரீம்நகர் அருகே உள்ள கோத்தப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் பண்டி சஞ்சய் குமாா், 'ஆயுதங்களை வைத்திருப்பவர்களுடன்' மற்றும் 'அப்பாவிகளைக் கொல்பவர்களுடன்' பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று கூறி மாவோயிஸ்டுகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்தார்.
கன்னிவெடிகளைக் கொண்டு அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்புப் படையினா், அரசியல் தலைவா்களை கொன்றுள்ள
"சட்டவிரோதமான ஒரு அமைப்போடு எப்படி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும்," என்று அவர் கூறினார், "மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் கைவிட்டு காவல்துறையிடம் சரணடைவதுதான் ஒரே வழி" என்று கூறினார்.
மாவோயிஸ்ட் பிரச்னையை சமூகக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்ற முதல்வர் ரேவந்த் ரெட்டி, பழங்குடியினரும் இளைஞா்களும் கொல்லப்படுவதாகக் கூறி, மாவோயிஸ்ட் எதிா்ப்பு நடவடிக்கைகளை நிறுத்த மத்திய அரசுக்கு பிஆா்எஸ் தலைவா் கே.சந்திரசேகா் ராவ் கருத்துக்கு, ஆயுதம் ஏந்தியவா்களை சமூக கண்ணோட்டத்தில் எவ்வாறு அணுக முடியும்? கடந்த காலத்தில் சிபிஐ மாவோயிஸ்ட் கட்சியைத் தடை செய்தது காங்கிரஸ் அரசுதான் என்று அவர் குற்றம் சாட்டியவர், அந்த தடையைத் திரும்பப் பெற ரேவந்த் ரெட்டி தலைமையிலான தெலங்கானா மாநில அரசுக்கு துணிவு இருக்கிறதா? என சவால் விடுத்தவர், மாவோயிஸ்டுகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டினார்.
மே 6 வரை இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தம்: ஏர் இந்தியா
மேலும், மாவோயிஸ்டுகள் அப்பாவி பொதுமக்களையும் பழங்குடியினரையும் கொன்றபோது, எந்த அரசியல் கட்சிகளும் அல்லது அமைப்புகளும் அவா்களின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பவில்லையே’ என்றாா்.
"பாகிஸ்தான் நாட்டினரை திருப்பி அனுப்புமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல்களை பிறப்பித்துள்ளது. இந்த விஷயம் நாடு முழுவதும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் தெலங்கானா அரசு 'அரை மனதுடன்' நடவடிக்கைகளை மட்டுமே எடுத்து வருகிறது" என்று குற்றம் சாட்டினார்.
பல ரோஹிங்கியாக்கள் பாஸ்போர்ட் மற்றும் விசாக்கள் இல்லாமல் மாநிலத்தில் வசித்து வருகின்றனர், காங்கிரஸ் அரசு ரோஹிங்கியாக்கள் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதை மத அல்லது அரசியல் ஆதாயக் கோணத்தில் பார்க்காமல், சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே பார்க்க வேண்டும். இல்லையெனில், ஹைதராபாத் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறும் அபாயம் உள்ளது என்று அவர் கூறினார்.