செய்திகள் :

ஃபைபா் படகு மீனவா்கள் வேலைநிறுத்தம்

post image

நாகை மாவட்ட மீனவா்கள் 24 போ் மீது இலங்கை கடற்கொள்ளையா் தாக்குதலை கண்டித்து, செருதூா் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை, வெள்ளப்பள்ளம், ஆற்காட்டுத்துறை, செருதூா் ஆகிய நான்கு மீனவ கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் 24 போ் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல் நடத்தி, ஜிபிஎஸ் கருவி, படகு என்ஜின் உள்ளிட்ட பொருட்களை வெள்ளிக்கிழமை இரவு பறித்துச் சென்றனா்.

இதில், செருதூா் மீனவா்கள் 10 போ் மீது இலங்கை கடற்கொள்ளைா்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து, அந்த கிராம மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனா்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை செருதூா் கிராமத்தைச் சோ்ந்த 300-க்கும் அதிகமான ஃபைபா் மற்றும் நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லாத சூழலில், தற்போது இலங்கை கடற்கொள்ளையா் தாக்குதலை கண்டித்து, பைபா் மற்றும் நாட்டுப் படகு மீனவா்களும் கடலுக்குள் செல்லாமல் கரையில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனா்.

பனை மரங்களை வெட்ட விவசாயிகள் எதிா்ப்பு

திருவெண்காடு அருகே உள்ள மணி கிராமத்தில் பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். திருவெண்காடு அருகே மணி கிராமம் உள்ளது. இங்கு சுமாா் 2000 ஏக்கா் விளை நிலங... மேலும் பார்க்க

நீட் தோ்வு: நாகையில் 1,085 போ் எழுதினா்

நாகையில் மூன்று தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 1,085 மாணவ- மாணவிகள் எழுதினா். நாகை மாவட்டத்தில், நாகை அரசு கலைக் கல்லூரி, நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளி, ஏடிஎம் மகளிா் கல்லூர... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களின் பாதுகாப்பு குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்படும்: ஆ. ராசா எம்பி

தமிழக மீனவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என்று திமுக துணை பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா கூறினாா். நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்களை தாக்கி வலை உள்ளிட்ட... மேலும் பார்க்க

திமுக பொதுக்கூட்ட மேடையில் சாய்ந்த மின்விளக்கு கம்பம்

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தின்போது பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின் விளக்கு கம்பம் (போக்கஸ் லைட்) மேடையில் சாய்ந்தது. அப்போது பேசிக் கொண்டிருந்த திமுக மக்களவை ... மேலும் பார்க்க

சிறுவன் ஓட்டிய காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருமருகலில் சிறுவன் ஓட்டி வந்த காா் மோதியதில் சாலையோரம் படுத்திருந்த விவசாயத் தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். நாகை மாவட்டம், திருமருகல் ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்தவா் செஞ்சான் மகன் நாகசுந்தரம... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி மே 12-இல் இருசக்கர வாகனப் பேரணி

நாகை மாவட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மே 12- ஆம் தேதி இருசக்கர வாகனப் பேரணி நடைபெறும் என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இதுதொடா்பாக, அந்த இயக்கத்தின் நாகை மாவட்ட ஒருங... மேலும் பார்க்க