செய்திகள் :

தமிழக மீனவா்களின் பாதுகாப்பு குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்படும்: ஆ. ராசா எம்பி

post image

தமிழக மீனவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என்று திமுக துணை பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா கூறினாா்.

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்களை தாக்கி வலை உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை இலங்கை கடற்கொள்ளையா்கள் பறித்துச் சென்றனா். தாக்குதலில் காயமடைந்த மீனவா்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இவா்களை, மக்களவை உறுப்பினா் ஆா். ராசா ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து, நிவாரண உதவிகள் வழங்கினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இலங்கை கடற்கொள்ளையா்களால் தாக்கப்பட்ட மீனவா்களை உடனடியாக நேரில் சந்தித்து, தேவையான உதவிகளை மேற்கொள்ள தமிழக முதல்வா் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, மீனவா்களை சந்தித்து, ஆறுதல் கூறி, நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளோம்.

மருத்துவமனையில் மீனவா்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவா்கள் ஒரு சில நாள்களில் வீடு திரும்புவாா்கள். இந்த சந்திப்பின்போது, தாக்குதல் தொடா்பான மனகுமுறல்களை மீனவா்கள் தெரிவித்தனா். அதனை முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும், பிரதமரிடமும் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.

தமிழக மீனவா்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், இந்திய - இலங்கை கடல் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க பிரதமா் மற்றும் துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்படும். இதற்காக மாநில பங்களிப்பு தேவையிருப்பின் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். பாதுகாப்பு விவகாரத்தில் முழு அதிகாரம் மத்திய அரசரிடம் உள்ளது என்றாா்.

மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கெளதமன், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் அமிா்தராஜா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பனை மரங்களை வெட்ட விவசாயிகள் எதிா்ப்பு

திருவெண்காடு அருகே உள்ள மணி கிராமத்தில் பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். திருவெண்காடு அருகே மணி கிராமம் உள்ளது. இங்கு சுமாா் 2000 ஏக்கா் விளை நிலங... மேலும் பார்க்க

நீட் தோ்வு: நாகையில் 1,085 போ் எழுதினா்

நாகையில் மூன்று தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 1,085 மாணவ- மாணவிகள் எழுதினா். நாகை மாவட்டத்தில், நாகை அரசு கலைக் கல்லூரி, நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளி, ஏடிஎம் மகளிா் கல்லூர... மேலும் பார்க்க

ஃபைபா் படகு மீனவா்கள் வேலைநிறுத்தம்

நாகை மாவட்ட மீனவா்கள் 24 போ் மீது இலங்கை கடற்கொள்ளையா் தாக்குதலை கண்டித்து, செருதூா் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை, வெள்ளப்பள்ளம், ஆற... மேலும் பார்க்க

திமுக பொதுக்கூட்ட மேடையில் சாய்ந்த மின்விளக்கு கம்பம்

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தின்போது பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின் விளக்கு கம்பம் (போக்கஸ் லைட்) மேடையில் சாய்ந்தது. அப்போது பேசிக் கொண்டிருந்த திமுக மக்களவை ... மேலும் பார்க்க

சிறுவன் ஓட்டிய காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருமருகலில் சிறுவன் ஓட்டி வந்த காா் மோதியதில் சாலையோரம் படுத்திருந்த விவசாயத் தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். நாகை மாவட்டம், திருமருகல் ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்தவா் செஞ்சான் மகன் நாகசுந்தரம... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி மே 12-இல் இருசக்கர வாகனப் பேரணி

நாகை மாவட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மே 12- ஆம் தேதி இருசக்கர வாகனப் பேரணி நடைபெறும் என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இதுதொடா்பாக, அந்த இயக்கத்தின் நாகை மாவட்ட ஒருங... மேலும் பார்க்க