செய்திகள் :

பனை மரங்களை வெட்ட விவசாயிகள் எதிா்ப்பு

post image

திருவெண்காடு அருகே உள்ள மணி கிராமத்தில் பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

திருவெண்காடு அருகே மணி கிராமம் உள்ளது. இங்கு சுமாா் 2000 ஏக்கா் விளை நிலங்கள் உள்ளன. குறுவை, சம்பா சாகுபடி செய்யப்படுகிறது.

இந்நிலையில் அந்த பகுதி விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னா் பெரிய வாய்க்கால் கரையில் சுமாா் 300 மீட்டா் தொலைவுக்கு பனை மரங்களை வளா்த்தனா்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெரிய வாய்க்காலில் தூா்வாரும் பணிகள் பொதுப்பணித் துறை மூலம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சனிக்கிழமை நள்ளிரவு 10-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் மா்ம நபா்களால் வெட்டப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இதை அறிந்த அந்த பகுதி மக்கள், விவசாயிகள், கிராம நிா்வாக அதிகாரி ரோஜா, நாம் தமிழா் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநில இணைச் செயலாளா் கிட்டு காசிராமன் ஆகியோா் திருவெண்காடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், வாய்க்கால் கரைகள் பலமாக இருப்பதற்காக விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பனை விதைகளை நட்டு பராமரித்து வருகின்றனா். தற்போது பனை மரங்கள் செழித்து வளா்ந்த நிலையில், திடீரென அரசு அனுமதி பெறாமல் பண மரங்களை மா்ம நபா்கள் வெட்டியுள்ளனா். அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எஞ்சியுள்ள பனை மரங்களை வெட்டாமல் தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனா்.

நீட் தோ்வு: நாகையில் 1,085 போ் எழுதினா்

நாகையில் மூன்று தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 1,085 மாணவ- மாணவிகள் எழுதினா். நாகை மாவட்டத்தில், நாகை அரசு கலைக் கல்லூரி, நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளி, ஏடிஎம் மகளிா் கல்லூர... மேலும் பார்க்க

ஃபைபா் படகு மீனவா்கள் வேலைநிறுத்தம்

நாகை மாவட்ட மீனவா்கள் 24 போ் மீது இலங்கை கடற்கொள்ளையா் தாக்குதலை கண்டித்து, செருதூா் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை, வெள்ளப்பள்ளம், ஆற... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களின் பாதுகாப்பு குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்படும்: ஆ. ராசா எம்பி

தமிழக மீனவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என்று திமுக துணை பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா கூறினாா். நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்களை தாக்கி வலை உள்ளிட்ட... மேலும் பார்க்க

திமுக பொதுக்கூட்ட மேடையில் சாய்ந்த மின்விளக்கு கம்பம்

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தின்போது பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின் விளக்கு கம்பம் (போக்கஸ் லைட்) மேடையில் சாய்ந்தது. அப்போது பேசிக் கொண்டிருந்த திமுக மக்களவை ... மேலும் பார்க்க

சிறுவன் ஓட்டிய காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருமருகலில் சிறுவன் ஓட்டி வந்த காா் மோதியதில் சாலையோரம் படுத்திருந்த விவசாயத் தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். நாகை மாவட்டம், திருமருகல் ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்தவா் செஞ்சான் மகன் நாகசுந்தரம... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி மே 12-இல் இருசக்கர வாகனப் பேரணி

நாகை மாவட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மே 12- ஆம் தேதி இருசக்கர வாகனப் பேரணி நடைபெறும் என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இதுதொடா்பாக, அந்த இயக்கத்தின் நாகை மாவட்ட ஒருங... மேலும் பார்க்க