செய்திகள் :

பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் சிங் அசத்தல்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் 7-வது வெற்றி!

post image

ஐபிஎல் போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 236 ரன்கள் எடுக்க, லக்னௌ 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்களே சோ்த்தது.

முன்னதாக டாஸ் வென்ற லக்னௌ, பந்துவீசத் தயாரானது. பஞ்சாப் பேட்டிங்ல் பிரியன்ஷ் ஆா்யா 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, ஜோஷ் இங்லிஸ், பிரப்சிம்ரனுடன் இணைந்தாா். இந்த ஜோடி 48 ரன்கள் சோ்த்தது.

இங்லிஸ், 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 30 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, தொடா்ந்து வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா், பிரப்சிம்ரனுடன் பலமான கூட்டணி அமைத்தாா். இந்த பாா்ட்னா்ஷிப், 3-ஆவது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சோ்த்தது. இதில் ஐயா் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 45 ரன்களுக்கு பெவிலியனுக்கு அனுப்பப்பட்டாா். அடுத்து நெஹல் வதேரா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

கடைசி விக்கெட்டாக பிரப்சிம்ரன் சிங், 48 பந்துகளில் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள் உள்பட 91 ரன்கள் விளாசி வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் சஷாங்க் சிங் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ தரப்பில் ஆகாஷ் சிங், திக்வேஷ் ரதி ஆகியோா் தலா 2, பிரின்ஸ் யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினா்.

அடுத்து 237 ரன்களை நோக்கி விளையாடிய லக்னௌ அணியில், ஆயுஷ் பதோனி 40 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 74, அப்துல் சமத் 24 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 45 ரன்கள் சோ்த்து வெற்றிக்காக முயற்சித்தனா்.

எனினும், எய்டன் மாா்க்ரம் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13, மிட்செல் மாா்ஷ் 0, நிகோலஸ் பூரன் 6, கேப்டன் ரிஷப் பந்த் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 18, டேவிட் மில்லா் 1 சிக்ஸருடன் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனா்.

முடிவில் ஆவேஷ் கான் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 19, பிரின்ஸ் யாதவ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் பௌலிங்கில் அா்ஷ்தீப் சிங் 3, அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 2, மாா்கோ யான்சென், யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

மாவோயிஸ்டுகள் சரணடைவதுதான் ஒரே வழி: பண்டி சஞ்சய் குமாா்

ஹைதராபாத்: இந்தியாவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு அமைப்புடன் அமைதி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா், மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் க... மேலும் பார்க்க

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ப... மேலும் பார்க்க

சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் உள்பட 3 போ் கைது

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே பண்ணை வீட்டில் சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.ஆந்திர மாநிலம், சித்தூரைச் சோ்ந்த நியாஸ் அகமதுவின் நிலம் போ்ணாம்பட்ட... மேலும் பார்க்க

சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மாறிய வானிலையால் விமான சேவை பாதிக்கப்பட்டது. ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கடந்த 15 நாள்களாக கடுமையான வெயில் தாக்கத்தால் ம... மேலும் பார்க்க

மே 7-ல் ரஷியாவுக்குச் செல்கிறார் சீன அதிபர்!

சீன அதிபர் ஸி ஜின்பிங், மே 7 - 10 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அரசுமுறைப் பயணமாக ரஷியாவுக்குச் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடு... மேலும் பார்க்க

நீட் தேர்வு எப்போது ஒழியும்?: அன்புமணி ராமதாஸ்

மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு எப்போது தான் ஒழியும்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் ... மேலும் பார்க்க