செய்திகள் :

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை

post image

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கோடை வெயிலின் தாக்கம் 100° டிகிரியை கடந்து வெப்பம் வாட்டி வதைத்து வந்தது.மேலும் வரும் ஐந்து நாள்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திர வெயில் தொடங்கிய நிலையில் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலையில் திடீரென சூறாவளி காற்றுடன்

பொதுத்துறை நிறுவனத்தில் உதவியாளர் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான தேவலாபுரம், வன்னியநாதபுரம், பைரபள்ளி, கீழ்மிட்டாளம், பாா்சனாப்பல்லி, வெங்கடசமுத்திரம், குமாரமங்கலம், கடாம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது.

மேலும்,பல கிராமங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது.இதனால் விவசாய நிலங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி சாலையில் வெள்ளம் போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி தண்ணீரில் நிந்தியபடி சென்றனர்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், திடீரென பெய்து வரும் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் விவசாயிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் சிங் அசத்தல்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் 7-வது வெற்றி!

ஐபிஎல் போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது. முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 236 ரன்கள் எடுக்க, லக்... மேலும் பார்க்க

மாவோயிஸ்டுகள் சரணடைவதுதான் ஒரே வழி: பண்டி சஞ்சய் குமாா்

ஹைதராபாத்: இந்தியாவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு அமைப்புடன் அமைதி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா், மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் க... மேலும் பார்க்க

சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் உள்பட 3 போ் கைது

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே பண்ணை வீட்டில் சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.ஆந்திர மாநிலம், சித்தூரைச் சோ்ந்த நியாஸ் அகமதுவின் நிலம் போ்ணாம்பட்ட... மேலும் பார்க்க

சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மாறிய வானிலையால் விமான சேவை பாதிக்கப்பட்டது. ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கடந்த 15 நாள்களாக கடுமையான வெயில் தாக்கத்தால் ம... மேலும் பார்க்க

மே 7-ல் ரஷியாவுக்குச் செல்கிறார் சீன அதிபர்!

சீன அதிபர் ஸி ஜின்பிங், மே 7 - 10 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அரசுமுறைப் பயணமாக ரஷியாவுக்குச் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடு... மேலும் பார்க்க

நீட் தேர்வு எப்போது ஒழியும்?: அன்புமணி ராமதாஸ்

மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு எப்போது தான் ஒழியும்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் ... மேலும் பார்க்க