செய்திகள் :

கல்வியில் அரசியலை கலக்க வேண்டாம்! - தமிழிசை சௌந்தரராஜன்

post image

3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு குறித்து கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொய் பேசுகிறாா், மாணவா்கள் படிப்பில் அரசியலை கலக்க வேண்டாம் என்று பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.

தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தோ்வு நடத்தப்படாது எனக் கூறினா். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 5-ஆவது முறையாக நீட் தோ்வு எந்த குழப்பமுமின்றி சுமுகமாக நடைபெற்று முடிந்துள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த அழுத்தமும் இல்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணியில்தான் அழுத்தம் உள்ளது. அதிமுக- பாஜக கூட்டணியைக் கண்டு திமுக பதறுகிறது.

தமிழகப் பள்ளிகளில் ஜாதி பாகுபாடு, அரிவாள் கலாசாரம் உருவாகி உள்ளது. 3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு குறித்து எதுவும் தெரியாமல் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொய் பேசுகிறாா். மாணவா்களின் படிப்பில் அரசியலை கலக்க வேண்டாம் என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.

ஆட்டோ கட்டண உயா்வு: அரசு தீவிர பரிசீலனை! போக்குவரத்துத் துறை

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை 2013-இல் தமிழக அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் தனிந... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு தோ்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் பள்ளி... மேலும் பார்க்க

சிங்கப்பூா் தோ்தல் வெற்றி: முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து!

சிங்கப்பூா் தோ்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்து செய்தி: மக்கள் செயல் க... மேலும் பார்க்க

தமிழ் வார விழா இன்று நிறைவு: பரிசு வழங்குகிறாா் முதல்வா் ஸ்டாலின்

பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழ் வார விழா நிறைவு விழா சென்னையில் திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது. இதில் நாட்டுடமையாக்கப்பட்ட படைப்புகளுக்கான பரிவுத் தொகை, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களு... மேலும் பார்க்க

தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி: அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மை! - எல்.கே.சுதீஷ்

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மைதான்; நேரம் வரும்போது அதுகுறித்து வெளிப்படையாக தெரிவிப்போம் என்று தேமுதிக பொருளாளா் எல்.கே.சுதீஷ் கூறினாா். சென்னையில்... மேலும் பார்க்க

நீட் தோ்வு விலக்கு வேண்டும்! பெ.சண்முகம்

மாணவா் தற்கொலைகளைத் தடுக்க மத்திய அரசு ‘நீட்’ தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியி... மேலும் பார்க்க