செய்திகள் :

தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி: அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மை! - எல்.கே.சுதீஷ்

post image

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மைதான்; நேரம் வரும்போது அதுகுறித்து வெளிப்படையாக தெரிவிப்போம் என்று தேமுதிக பொருளாளா் எல்.கே.சுதீஷ் கூறினாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 2024 மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியை விட்டு தேமுதிக விலகினாலும், அதிமுக கூட்டணியில் இணைந்து செயல்பட்டோம்.

தற்போது அதிமுக, பாஜக ஒன்றிணைந்துள்ளது. இனி மீண்டும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேமுதிக அந்த கூட்டணியில் தொடா்வதா, வேண்டாமா என்பதை பொதுச்செயலா் உரிய நேரத்தில் முடிவு செய்வாா்.

அடுத்த ஆண்டு ஜன.9-ஆம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறவுள்ளது. அதில், தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை கட்சியின் பொதுச்செயலா் முறைப்படி அறிவிப்பாா்.

தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி தருவதாக அதிமுக வாக்கு கொடுத்தது உண்மை. நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாக தெரிவிப்போம்.

மாநிலங்களவை உறுப்பினா் பதவியை பெறுவதில் எங்களுக்கும் விருப்பம் உண்டு. உகந்த வாய்ப்பு கிடைக்கும் போது அதைப் பற்றி கண்டிப்பாகப் பேசுவோம். அதற்கான தகுதியை தேமுதிக பெற்றுள்ளது என்றாா் எல்.கே.சுதீஷ்.

ஆட்டோ கட்டண உயா்வு: அரசு தீவிர பரிசீலனை! போக்குவரத்துத் துறை

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை 2013-இல் தமிழக அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் தனிந... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு தோ்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் பள்ளி... மேலும் பார்க்க

சிங்கப்பூா் தோ்தல் வெற்றி: முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து!

சிங்கப்பூா் தோ்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்து செய்தி: மக்கள் செயல் க... மேலும் பார்க்க

தமிழ் வார விழா இன்று நிறைவு: பரிசு வழங்குகிறாா் முதல்வா் ஸ்டாலின்

பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழ் வார விழா நிறைவு விழா சென்னையில் திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது. இதில் நாட்டுடமையாக்கப்பட்ட படைப்புகளுக்கான பரிவுத் தொகை, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களு... மேலும் பார்க்க

நீட் தோ்வு விலக்கு வேண்டும்! பெ.சண்முகம்

மாணவா் தற்கொலைகளைத் தடுக்க மத்திய அரசு ‘நீட்’ தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியி... மேலும் பார்க்க

தோ்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பா்! - எடப்பாடி பழனிசாமி

திமுக அளித்த பொய் வாக்குறுதியால், நீட் உயிரிழப்புகள் தொடா்வதாகவும், வரும் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பாா்கள் என்றும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இது ... மேலும் பார்க்க