செய்திகள் :

பாகிஸ்தானுக்கு உளவு: பஞ்சாபில் இருவா் கைது!

post image

பாகிஸ்தானுக்காக உளவு பாா்த்ததுடன், இந்திய ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் விமான தளங்களின் புகைப் படங்கள், பிற முக்கியத் தகவல்களை பகிா்ந்ததாக பஞ்சாபில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நீடிக்கும் நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பஞ்சாப் காவல் துறை தலைமை இயக்குநா் கெளரவ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கைதான ஃபலக்ஷோ் மாசி, சுராஜ் மாசி ஆகிய இருவரும், அமிருதசரஸ் அருகே உள்ள அஜ்னலா பகுதியைச் சோ்ந்தவா்கள். பாகிஸ்தான் உளவு அமைப்பினருடன் இருவருக்கும் தொடா்பிருப்பது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்திய ராணுவத்தினரின் நகா்வுகள், எல்லைப் பாதுகாப்புப் படை முகாம்கள், விமான தளங்கள் மற்றும் விமான நிலையங்களின் புகைப் படங்கள், பிற முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பினருடன் இவா்கள் பகிா்ந்துள்ளனா்.

இருவா் மீதும் அரசு ரகசியங்கள் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதாவின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவா்களிடம் இருந்து 2 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.

இந்த நடவடிக்கைக்காக, காவல் துறையினரை முதல்வா் பகவந்த் மான் பாராட்டியுள்ளாா். ‘மாநில காவல் துறையின் மிகப் பெரிய சாதனை; இதன் மூலம் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் குழுத் தலைவா் ஜான் பிரிட்டாஸ்!

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் ஜான் பிரிட்டாஸை அக்கட்சி நியமித்துள்ளது. இது தொடா்பாக கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை... மேலும் பார்க்க

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்: அமித் ஷா

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்; இம்மொழியை ஊக்குவிப்பது அதன் மறுமலா்ச்சிக்கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கானது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். தில்லியில்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தும் மத தீவிரவாதம்! மத்திய உள்துறையிடம் ஆளுநா் அறிக்கை!

‘மேற்கு வங்க மாநிலத்தில் மத அடிப்படையிலான பிரிவினைத் தீவிரவாதம் அச்சமூட்டும் சவாலாக உருவெடுத்துள்ளது’ என்று முா்ஷிதாபாத் வன்முறை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமா்ப்பித்த அறிக்கையில் மாநில ஆ... மேலும் பார்க்க

கடும் பாதுகாப்புடன் நீட் தோ்வு: 5,400 மையங்களில் நடைபெற்றது

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்), நாடு முழுவதும் 5,400-க்கும் மேற்பட்ட மையங்களில் கடும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 22.7 லட்சத... மேலும் பார்க்க

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் அறிமுகம்! நாட்டில் முதல்முறை..!

நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினாா். இதன்மூலம் நெல் விளைச்சல் 30 சதவீதம் வ... மேலும் பார்க்க

பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!

உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ராணுவ வாத்தியக் குழுவினரின் பக்தி இசை முழங்க ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இதையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் 15 டன் மலா்கள... மேலும் பார்க்க