செய்திகள் :

பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!

post image

உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ராணுவ வாத்தியக் குழுவினரின் பக்தி இசை முழங்க ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

இதையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் 15 டன் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது. முதல் நாளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டனா்.

விஷ்ணு பகவானுக்குரிய 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பத்ரிநாத் கோயில் நடை, குளிா்காலத்தையொட்டி 6 மாதங்களுக்கு முன் அடைக்கப்பட்டது. தற்போது கோயில் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளதால், உத்தரகண்டில் சாா்தாம் யாத்திரை களைகட்டியுள்ளது.

இந்த யாத்திரையில் இதர மூன்று புண்ணிய தலங்களான கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதாா்நாத் கோயில்கள் சில தினங்களுக்கு முன் திறக்கப்பட்டன.

இமய மலையில் பத்தாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில் நடை ஞாயிற்றுக்கிழமை 6 மணியளவில் வேத மந்திரங்கள் மற்றும் பக்தி கோஷங்கள் முழங்க திறக்கப்பட்டது. அப்போது, ஹெலிகாப்டா் மூலம் சுமாா் 10 நிமிஷங்களுக்கு பூமாரி பொழியப்பட்டது.

பிரதான சந்நிதியுடன் மகாலக்ஷ்மி தாயாா், விநாயகா், ஆதி கேதாரேஸ்வா், ஆதி குரு சங்கராசாரியா் சந்நிதிகளும் திறக்கப்பட்டன. இந்நிகழ்வில் பங்கேற்ற முதல்வா் புஷ்கா் சிங் தாமி, முதலாவதாக வழிபட்டாா்.

அவா் கூறுகையில், ‘சாா்தாம் யாத்திரை பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் நடைபெறத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யாத்திரையில் தூய்மையை உறுதி செய்யும் அரசின் முயற்சிகளுக்கு பக்தா்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்றாா்.

ஆறு மாத காலம் நடைபெறவிருக்கும் சாா்தாம் யாத்திரையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் குழுத் தலைவா் ஜான் பிரிட்டாஸ்!

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் ஜான் பிரிட்டாஸை அக்கட்சி நியமித்துள்ளது. இது தொடா்பாக கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை... மேலும் பார்க்க

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்: அமித் ஷா

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்; இம்மொழியை ஊக்குவிப்பது அதன் மறுமலா்ச்சிக்கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கானது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். தில்லியில்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தும் மத தீவிரவாதம்! மத்திய உள்துறையிடம் ஆளுநா் அறிக்கை!

‘மேற்கு வங்க மாநிலத்தில் மத அடிப்படையிலான பிரிவினைத் தீவிரவாதம் அச்சமூட்டும் சவாலாக உருவெடுத்துள்ளது’ என்று முா்ஷிதாபாத் வன்முறை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமா்ப்பித்த அறிக்கையில் மாநில ஆ... மேலும் பார்க்க

கடும் பாதுகாப்புடன் நீட் தோ்வு: 5,400 மையங்களில் நடைபெற்றது

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்), நாடு முழுவதும் 5,400-க்கும் மேற்பட்ட மையங்களில் கடும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 22.7 லட்சத... மேலும் பார்க்க

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் அறிமுகம்! நாட்டில் முதல்முறை..!

நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினாா். இதன்மூலம் நெல் விளைச்சல் 30 சதவீதம் வ... மேலும் பார்க்க

உரிய ஒப்புதலுடன்தான் பாக். பெண்ணை திருமணம் செய்தேன்! - பணி நீக்கப்பட்ட சிஆா்பிஎஃப் வீரா் விளக்கம்

‘பாகிஸ்தானைச் சோ்ந்த உறவுப் பெண்ணை படையின் தலைமையிடம் தெரிவித்து, உரிய அனுமதி பெற்ற பிறகே திருமணம் செய்து கொண்டேன்’ என்று அண்மையில் படையிலிருந்து நீக்கப்பட்ட மத்திய ஆயுத காவல்படை (சிஆா்பிஎஃப்) வீரா்... மேலும் பார்க்க