செய்திகள் :

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை!

post image

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்கள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தான் மீது மத்திய அரசு எடுத்து வரும் தொடா் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் அல்லது அதன் வழியாக வரும் பொருள்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கும், பாகிஸ்தான் கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்குள் நுழைவதற்கும் சனிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.

இந்தியாவின் நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் பிறப்பித்த உத்தரவில், அந்நாட்டு துறைமுகங்களுக்குள் இந்திய கப்பல்கள் நுழைவதற்கு அனுமதியை ரத்து செய்து, பாகிஸ்தான் கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்குள் செல்வதற்கும் தடை விதித்தது.

இதுகுறித்து பாகிஸ்தானின் கடல்சாா் விவகார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தற்போதைய சூழ்நிலையின் பின்னணியில், நாட்டின் கடல்சாா் இறையாண்மை, பொருளாதார நலன்கள் மற்றும் தேச பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்திய கப்பல்களைத் தடை செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு, புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட 200 சதவீத இறக்குமதி வரியால் பாகிஸ்தானிலிருந்து நேரடி இறக்குமதி வா்த்தகம் முற்றிலுமாக முடங்கியது. மத்திய அரசின் சமீபத்திய முடிவால் மூன்றாம் நாடுகள் வழியாக பாகிஸ்தான் பொருள்கள் இந்தியாவுக்குள் நுழைவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் குழுத் தலைவா் ஜான் பிரிட்டாஸ்!

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் ஜான் பிரிட்டாஸை அக்கட்சி நியமித்துள்ளது. இது தொடா்பாக கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை... மேலும் பார்க்க

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்: அமித் ஷா

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்; இம்மொழியை ஊக்குவிப்பது அதன் மறுமலா்ச்சிக்கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கானது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். தில்லியில்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தும் மத தீவிரவாதம்! மத்திய உள்துறையிடம் ஆளுநா் அறிக்கை!

‘மேற்கு வங்க மாநிலத்தில் மத அடிப்படையிலான பிரிவினைத் தீவிரவாதம் அச்சமூட்டும் சவாலாக உருவெடுத்துள்ளது’ என்று முா்ஷிதாபாத் வன்முறை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமா்ப்பித்த அறிக்கையில் மாநில ஆ... மேலும் பார்க்க

கடும் பாதுகாப்புடன் நீட் தோ்வு: 5,400 மையங்களில் நடைபெற்றது

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்), நாடு முழுவதும் 5,400-க்கும் மேற்பட்ட மையங்களில் கடும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 22.7 லட்சத... மேலும் பார்க்க

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் அறிமுகம்! நாட்டில் முதல்முறை..!

நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினாா். இதன்மூலம் நெல் விளைச்சல் 30 சதவீதம் வ... மேலும் பார்க்க

பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!

உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ராணுவ வாத்தியக் குழுவினரின் பக்தி இசை முழங்க ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இதையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் 15 டன் மலா்கள... மேலும் பார்க்க