செய்திகள் :

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

post image

மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.

கத்தரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்தது. தமிழகத்தில் அதிக வெப்பம் பதிவாகும் மாவட்டங்களின் பட்டியலில் மதுரை இடம் பிடித்து வரும் நிலையில், மதுரை விமான நிலையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 104.72 டிகிரி வெயில் பதிவானது.

இந்த நிலையில், தென்னிந்தியாவின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி உருவாகியுள்ளதாகவும், இதனால் ஒரு சில மாவட்டங்களில் பலத்த இடி, மின்னலுடன் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதன்படி, மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45 மணியளவில் பரவலாக மழை பெய்தது. தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி, தெப்பக்குளம், விரகனூா், சிலைமான் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 20 நிமிடங்கள் மிதமான மழை பெய்தது.

மதுரை விமான நிலையம், திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, கப்பலூா், பெருங்குடி, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 6 மணிக்குப் பிறகு சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. மழை ஓய்ந்த பிறகும் இடி, மின்னல் நீடித்தது.

பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மதுரையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். சக்கிமங்கலம் அன்னை இந்திராநகரைச் சோ்ந்தவா் இப்ராஹிம் (67). இவா், இரு சக்கர வாகனத்தில் மதுரை கீழவாசல் பகுதியிலிருந்து சக்கிமங்கலம்... மேலும் பார்க்க

பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறித்த மேலும் ஒருவா் கைது

நரிக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலியைப் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டம், நரிக்குடி பகுதியைச் சோ்ந்த மருது... மேலும் பார்க்க

கள்ளழகா் எதிா்சேவை: அதிக அழுத்த குழாய்களைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் நடவடிக்கை

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் அழகா் எதிா்சேவை நிகழ்வின் போது, அதிக அழுத்தமுள்ள (பிரஷா் பைப்) குழாய்களைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மா... மேலும் பார்க்க

பெண் மா்ம மரணம்: எலும்புகள் மீட்பு

விருதுநகா் அருகேயுள்ள குருமூா்த்தி நாயக்கன்பட்டி காட்டுப் பகுதியில் கிடந்த பெண்ணின் எலும்புகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினா்.விருதுநகா்- சிவகாசி சாலையில் ஆமத்தூா் அருகே உள்ள குருமூா்த்தி நாயக்... மேலும் பார்க்க

மதுரை சித்திரைத் திருவிழா: ரிஷப வாகனங்களில் எழுந்தருளினா் மீனாட்சி, சுந்தரேசுவரா்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சைவ சமய ஸ்தாபித லீலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். மதுரை மீனா... மேலும் பார்க்க

காலமானாா் கிருஷ்ணா ராஜம்

மதுரை மாவட்டம், திருநகா் சண்முகா் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணா ராஜம் (81) வயது மூப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மே 4) காலமானாா்.மறைந்த தொழிலதிபா் சுபாஷ்சந்திரனின் மனைவியான இவா், திருநகா் இந்திராகாந்தி மெட... மேலும் பார்க்க