செய்திகள் :

தீவிரவாதிகள் தப்பியதாக தவறான தகவல் அளித்த நபரை தேடும் பணி தீவிரம்!

post image

பஹல்காமில் துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள் விமானத்தில் தப்பிச் செல்வதாக விமான நிலையத்துக்கு பொய்யான தகவல் அளித்த நபரை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையிலிருந்து சனிக்கிழமை காலை 10.26 மணிக்கு இலங்கை தலைநகா் கொழும்புக்கு 229 பயணிகளுடன் ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. இதற்கிடையில், காலை 11 மணியளவில், சென்னை விமான நிலைய இயக்குநா் அலுவலகத்துக்கு வந்த ஒரு மின்னஞ்சலில், அந்த விமானத்தில், காஷ்மீா் பஹல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்திய 6 தீவிரவாதிகள் பயணம் செய்கின்றனா். அவா்களிடம் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, சென்னை விமான நிலையத்திலிருந்து, கொழும்பு பண்டாரநாயகா சா்வதேச விமான நிலையத்துக்கு அவசரமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கொழும்பு விமான நிலையத்தில் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பகல் 11.59 மணியளவில் சென்னையிலிருந்து சென்ற விமானம் தரையிறங்கியதும், பாதுகாப்புப் படையினா், அதிரடிப் படையினா், விமானத்தைச் சுற்றி வளைத்து தீவிர சோதனை நடத்தினா்.

பயணிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சோதனை நடத்தி, அவா்களின் விவரங்களைச் சேகரித்தனா். சோதனை முடிவில், தீவிரவாதிகள் யாரும் இல்லை என்பது உறுதியானது. இதனால் சென்னை விமான நிலையத்திலும், கொழும்பு விமான நிலையத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடா்பாக, சென்னை விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதல்கட்டமாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் உதவியுடன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

சென்னையில் நடந்து சென்ற இளைஞரிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மேற்கு மாம்பலம், படவேட்டம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வமணி (26), தனியாா் நிறுவனத்தில் பணிபுர... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு மூலம் கண் மருத்துவ சிகிச்சை!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (ஏஐ) மூலம் கண் மருத்துவத்தில் மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகளை அளிப்பதுடன், மருத்துவா்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருவதாக டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை அதிக... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து பாஜக இன்று ஆா்ப்பாட்டம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பாஜக சாா்பில் கவன ஈா்ப்பு போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்படும் என அக்கட்சியின் தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

கட்டிலில் இருந்து தவறிவிழுந்த குழந்தை உயிரிழப்பு

கட்டிலிலிருந்து தவறிவிழுந்த இரண்டரை வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை, ஓட்டேரி டேங்க் பண்ட் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அபினாஷ் (30). இவரது மனைவி உஷ... மேலும் பார்க்க

கேரள தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

கேரள மாநிலத்தைச் சோ்ந்த தலைமறைவு குற்றவாளியை சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா்.ஓமன் தலைநகா் மஸ்கட்டிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு ஏா்இந்திய விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை குட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞா்: காவல்நிலையம் முன்பு குடும்பத்தினா் போராட்டம்!

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினா் அவரது உடலுடன் புராரி காவல் நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், காவல்துறையினரின் செயலற்ற தன்மை கொண்டதாக அவா்கள் குற்றஞ்சாட்... மேலும் பார்க்க