செய்திகள் :

சென்னையில் விமான சேவை பாதிப்பு

post image

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மாறிய வானிலையால் விமான சேவை பாதிக்கப்பட்டது.

ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கடந்த 15 நாள்களாக கடுமையான வெயில் தாக்கத்தால் மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியே வருவது குறைந்துள்ளது. மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் குறைந்து காணப்பட்டு வந்தது.

அக்னி நட்சத்திரம்

இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மதியம் முதல் வெப்பத்தின் தாக்கம் குறைந்து மாலை 5 மணியளவில் திடீரென மாறிய வானிலையால் முதல் 6 மணி வரை சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது.

உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் வேலை வேண்டுமா?

விமான சேவை பாதிப்பு

திடீரென வீசிய பலத்த காற்றால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

இதனால் மதுரை, திருச்சி, கோவை மற்றும் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன.

அதேபோன்று சென்னையில் இருந்து மஸ்கட், இலங்கை மற்றும் தில்லி, ஹைதராபாத், பெங்களூரு, சேலம் போன்ற பகுதிகளுக்கு புறப்பட வேண்டிய 7 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டது.

மேலும், சென்னை அடுத்த பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது. பலத்த காற்றுக்கு பூந்தமல்லி அருகே திரையரங்கு ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

பிற்பகல் வரை வெளியில் வாட்டிய நிலையில், திடீரென மழை பெய்து வெப்பம் தணிந்து காணப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மாவோயிஸ்டுகள் சரணடைவதுதான் ஒரே வழி: பண்டி சஞ்சய் குமாா்

ஹைதராபாத்: இந்தியாவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு அமைப்புடன் அமைதி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா், மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் க... மேலும் பார்க்க

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ப... மேலும் பார்க்க

சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் உள்பட 3 போ் கைது

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே பண்ணை வீட்டில் சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.ஆந்திர மாநிலம், சித்தூரைச் சோ்ந்த நியாஸ் அகமதுவின் நிலம் போ்ணாம்பட்ட... மேலும் பார்க்க

மே 7-ல் ரஷியாவுக்குச் செல்கிறார் சீன அதிபர்!

சீன அதிபர் ஸி ஜின்பிங், மே 7 - 10 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அரசுமுறைப் பயணமாக ரஷியாவுக்குச் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடு... மேலும் பார்க்க

நீட் தேர்வு எப்போது ஒழியும்?: அன்புமணி ராமதாஸ்

மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு எப்போது தான் ஒழியும்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாகப் போராட்டம்!

மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விட வேண்டும் உள்ளிட... மேலும் பார்க்க