செய்திகள் :

மே 6 வரை இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தம்: ஏர் இந்தியா

post image

இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தில்லியிலிருந்து அங்குச் செல்லவிருந்த விமானத்தை அபுதாபிக்கு ஏர் இந்தியா நிறுவனம் திருப்பிவிட்டது.

இங்கிருந்து புறப்பட்ட பிறகு தாக்குதல் நடத்தப்பட்டதால், ஜோர்டான் வான்வெளிப்பரப்பில் விமானம் சென்றுக்கொண்டிருக்கும்போது அபுதாபிக்கு திருப்பிவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மே 6ஆம் தேதி வரை டெல் அவிவ் நகரத்துக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா மட்டுமின்றி ஜெர்மனியைச் சேர்ந்த லுஃப்தான்சா, அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ், சுவிட்சர்லாந்தின் சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக சைப்ரஸ் நாட்டுக்குச் சொந்தமான டியூஎஸ் ஏர்வேஸ் விமான நிறுவனங்களும் டெல் அவிவ் நகரத்துக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன.

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரிலுள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து யேமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் விமான நிலையத்திற்குச் சொந்தமான இடங்கள் சேதமடைந்தன.

குறிப்பாக விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தின் அருகேவுள்ள சாலைகள், ஏவுகணைத் தாக்குதலால் பள்ளமாகின.

இதனால், அந்த விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. விமான நிலையத்தின் அனைத்து வாயில்களும் சிறிது நேரத்துக்கு மூடப்பட்டு, விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

தாக்குதல் நடந்தபோது தில்லியில் இருந்து டெல் அவிவ் நகருப்பு புறப்பட்ட விமானம் ஜோர்டான் வான்வெளிப் பரப்பில் இருந்தபோது அபுதாபிக்கு திருப்பிவிடப்பட்டது.

இதையும் படிக்க | இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஹவுதி தாக்குதல்!

பாகிஸ்தானுக்கு உளவு: பஞ்சாபில் இருவா் கைது!

பாகிஸ்தானுக்காக உளவு பாா்த்ததுடன், இந்திய ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் விமான தளங்களின் புகைப் படங்கள், பிற முக்கியத் தகவல்களை பகிா்ந்ததாக பஞ்சாபில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். பஹல்காம் ப... மேலும் பார்க்க

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை!

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்கள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தான் மீது மத்திய அரசு எடுத்து வரும் தொடா் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாகி... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு ராகுலுக்கு கிடைத்த வெற்றி! - கு.செல்வப்பெருந்தகை

மத்திய அரசு அறிவித்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு திட்டம் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கிடைத்த வெற்றி என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா். சென்னை தேனாம்பேட்டை... மேலும் பார்க்க

காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளாா் ராகுல்! பாஜக குற்றச்சாட்டு!

பகவான் ராமரை ‘புராண காதாபாத்திரம்’ என்று கூறியதன் மூலம் காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை ராகுல் காந்தி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளாா் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. அண்மையில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட ர... மேலும் பார்க்க

இஸ்ரேல் விமான நிலையம் அருகே ஏவுகணைத் தாக்குதல்! அபுதாபி திரும்பிய இந்திய விமானம்!

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அமைந்த பென் குரியன் சா்வதேச விமான நிலையம் அருகே யேமனிலிருந்து ஹூதி அமைப்பினா் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில் 4 போ் காயமடைந்தனா். இந்தத் தாக்குதலையடுத்து, தில்லிய... மேலும் பார்க்க

தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி பிரியதா்சினி காலமானாா்!

தெலங்கானா உயா்நீதிமன்ற பெண் நீதிபதி எம்.ஜி.பிரியதா்சினி உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரின் இறுதிச் சடங்கு ஹைதராபாதில் திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு தெலங்கானா... மேலும் பார்க்க