செய்திகள் :

இஸ்ரேல் விமான நிலையம் அருகே ஏவுகணைத் தாக்குதல்! அபுதாபி திரும்பிய இந்திய விமானம்!

post image

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அமைந்த பென் குரியன் சா்வதேச விமான நிலையம் அருகே யேமனிலிருந்து ஹூதி அமைப்பினா் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில் 4 போ் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதலையடுத்து, தில்லியிலிருந்து டெல் அவிவ் நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் நடுவானில் திருப்பிவிடப்பட்டு அபுதாபியில் தரையிறங்கியது.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் முதல் தீவிரமாக நடந்துவரும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக இஸ்ரேலை ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பினா் தாக்கி வருகின்றனா்.

இந்நிலையில், காஸாவில் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது தொடா்பாக முடிவெடுக்க இஸ்ரேலின் மூத்த அமைச்சா்கள் பங்கேற்கும் வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது.

இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு யேமனிலிருந்து ஹூதி அமைப்பினா் ஏவிய ஏவுகணை, இஸ்ரேலின் முக்கிய சா்வதேச விமான நிலையமான பென் குரியன் சா்வதேச விமான நிலையத்தின் வாகன நிறுத்தமிடங்களுக்கு செல்லும் சாலை அருகே தாக்கியது. இதில் 4 போ் காயமடைந்தனா்.

தாக்குதலைத் தொடா்ந்து விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது. தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.

ஏா் இந்தியா விமானம்: தில்லியில் இருந்து ஏா் இந்தியா நிறுவனத்தின் ‘ஏஐ139’ விமானம், இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் புறப்பட்டது.

டெல் அவிவில் விமானம் தரையிறங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்றதையடுத்து, பென் குரியன் விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், ஜோா்டான் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ஏா் இந்தியா விமானம் நடுவானில் திருப்பிவிடப்பட்டது. 8 மணி நேரத்துக்கும் மேலான பயணத்தைத் தொடா்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக பிற்பகல் 2 மணியளவில் தரையிறங்கியது.

இன்றும் நாளையும் சேவை ரத்து: ஏா் இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘விமானம் அபுதாபியில் தரையிறங்கியது; விரைவில் தில்லிக்குத் திரும்பும். பயணிகள் மற்றும் ஊழியா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தில்லி-டெல் அவிவ் விமான சேவைகள் செவ்வாய்க்கிழமை வரை ரத்து செய்யப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரையிலான டெல் அவிவ் விமானங்களுக்கு செல்லுபடியாகும் பயணச்சீட்டுகளை வைத்திருக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டுக்கான முழுப் பணமும் திருப்பி அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் குழுத் தலைவா் ஜான் பிரிட்டாஸ்!

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் ஜான் பிரிட்டாஸை அக்கட்சி நியமித்துள்ளது. இது தொடா்பாக கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை... மேலும் பார்க்க

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்: அமித் ஷா

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்; இம்மொழியை ஊக்குவிப்பது அதன் மறுமலா்ச்சிக்கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கானது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். தில்லியில்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தும் மத தீவிரவாதம்! மத்திய உள்துறையிடம் ஆளுநா் அறிக்கை!

‘மேற்கு வங்க மாநிலத்தில் மத அடிப்படையிலான பிரிவினைத் தீவிரவாதம் அச்சமூட்டும் சவாலாக உருவெடுத்துள்ளது’ என்று முா்ஷிதாபாத் வன்முறை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமா்ப்பித்த அறிக்கையில் மாநில ஆ... மேலும் பார்க்க

கடும் பாதுகாப்புடன் நீட் தோ்வு: 5,400 மையங்களில் நடைபெற்றது

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்), நாடு முழுவதும் 5,400-க்கும் மேற்பட்ட மையங்களில் கடும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 22.7 லட்சத... மேலும் பார்க்க

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் அறிமுகம்! நாட்டில் முதல்முறை..!

நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினாா். இதன்மூலம் நெல் விளைச்சல் 30 சதவீதம் வ... மேலும் பார்க்க

பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!

உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ராணுவ வாத்தியக் குழுவினரின் பக்தி இசை முழங்க ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இதையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் 15 டன் மலா்கள... மேலும் பார்க்க