செய்திகள் :

ஐஐடி கரக்பூர் விடுதி அறையில் மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுப்பு

post image

ஐஐடி கரக்பூர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்றாம் ஆண்டு மாணவர் கண்டெடுக்கப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலம், ஐஐடி கரக்பூரில் பிடெக் மூன்றாம் ஆண்டு மாணவர் முகமது ஆசிப் கமர். இவர், மதன்மோகன் மால்வியா ஹாலில் உள்ள அவரது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

சனிக்கிழமை இரவு முதல் அவரது கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததாகவும் இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை காலை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸார் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். கமர் பிகாரில் உள்ள சியோஹர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். உடனே அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஹூஸ்டனில் குடும்ப விருந்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 14 பேர் காயம்

மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் மரணத்தை உறுதிப்படுத்தினார். போலீஸாருக்கு சில துப்பு கிடைத்துள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

முதல்கட்டமாக இது தற்கொலை வழக்கு என்று பதிவு செய்து விசாரணைகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இச்சம்பவம் ஐஐடி கரக்பூர் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு நிறைவு: இயற்பியல் கடினம்; உயிரியல் சற்று எளிமை!

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது. இதில், இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், உயிரியல் கேள்விகள் சற்று எளிமையாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்... மேலும் பார்க்க

ரூ. 40 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் விற்க முயன்ற 3 பேர் கைது!

ராஜஸ்தானில் ரூ. 40 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் விற்க முயன்ற 3 பேரை அம்மாநில காவல் துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழுவினர் கைது செய்தனர். தேர்வு எழுதவிருந்த மாணவரின் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்புக... மேலும் பார்க்க

மும்பையில் புல்லட் ரயில் நிலையம்: ‘வேகமாக நடைபெறும் கட்டுமானப் பணிகள்’

புல்லட் ரயிலின் பயணம் தொடங்கும் நிலையத்தைக் கட்டமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையே பு... மேலும் பார்க்க

1,000 ஆண்களுக்கு 700 பெண்கள் மட்டுமே! கிராமங்களில் பாலின விகிதாச்சாரம் அதிகரிப்பு!

ஹரியாணாவில் பல கிராமங்களில் 1,000 ஆண்களுக்கு 700 பெண்கள் மட்டுமே என்கிற விகிதத்தில் பாலின விகிதாச்சார இடைவெளி அதிகரித்திருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.அங்குள்ள பல கிராமப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: சூறைக்காற்றின் போது மரம் விழுந்ததில் 2 பலி, ஒருவர் காயம்

மத்தியப் பிரதேசத்தில் சூறைக்காற்றின் போது மரம் விழுந்ததில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் சூறைக்காற்றின் போது மரம் விழுந்ததில் இரண்டு... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்தது: 3 வீரர்கள் பலி

ஜம்மு-காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் 3 வீரர்கள் பலியானார்கள். ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வீரர்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனம் சாலையை விட்டு விலகி 700 அடி ஆழமுள்ள பள்... மேலும் பார்க்க