செய்திகள் :

1,000 ஆண்களுக்கு 700 பெண்கள் மட்டுமே! கிராமங்களில் பாலின விகிதாச்சாரம் அதிகரிப்பு!

post image

ஹரியாணாவில் பல கிராமங்களில் 1,000 ஆண்களுக்கு 700 பெண்கள் மட்டுமே என்கிற விகிதத்தில் பாலின விகிதாச்சார இடைவெளி அதிகரித்திருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

அங்குள்ள பல கிராமப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 481 கிராமங்களில் பாலின விகிதாச்சாரம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் ஹரியாணாவில் பிறப்பு விகிதத்தை ஆய்வு செய்தபோது, ஆயிரம் ஆண் குழந்தைகள் பிரசவிக்கிறது எனில் அதை ஒப்பிடும்போது 700-க்கும் குறைவான பெண் குழந்தைகளே பிறக்கின்றன.

ஹரியானாவில் வடக்கு மற்றும் வட கிழக்கு மாவட்டங்களில் அமைந்துள்ள கிராமங்களில் இதுவே கள யதார்த்தம் என்கிறது ஆய்வு முடிவு.

ஹரியாணாவில் மொத்தமுள்ள 6,842 கிராமங்களில், ஆம்பாலா மாவட்டத்தில் 54, அதனையொட்டியுள்ள யமுனாநகர் மாவட்டத்தில் 53, பஞ்ச்குலா மாவட்டத்தில் 38 கிராமங்கள், ஹரியாணாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள பிவானி மாவட்டத்தில் 46 கிராமங்கள், மஹேந்தர்கர் மாவட்டத்தில் 42 கிராமங்களில் பாலின விகிதாச்சார இடைவெளி அதிகரித்துள்ளது.

மேற்கண்ட அனைத்து கிராமங்களும் ஹரியாணாவின் எல்லையோரப் பகுதிகளாக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது. அதன் அண்டை மாநிலங்களான தெற்கே ராஜஸ்தான், வடக்கே பஞ்சாப், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநில எல்லைகளையொட்டி இந்த கிராமங்கள் அமைந்திருக்கின்றன.

இதனால் இங்குள்ள மக்கள் எளிதில் அந்த மாநிலங்களுக்குச் செல்ல முடிகிறது. அங்கு செல்லும் அவர்கள், மருத்துவப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் ஆணா அல்லது பெண்ணா என்பதை முன்கூட்டியே அறிந்து, பெண்ணாக இருப்பின் சட்டத்துக்குப் புறம்பாக கருவைக் கலைத்துவிடும் சம்பவங்களும் சத்தமில்லாமல் அதிகரித்துள்ளது.

இதற்கான தீர்வு, அனைத்து மாநிலங்களின் கூட்டு நடவடிக்கையால் மட்டுமே எட்டப்பட முடியும் என்கின்றனர் சுகாதாரத் துறை அதிகாரிகள். பாஜக ஆளுங்கட்சியாக உள்ள ஹரியாணாவில், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலின விகிதாச்சார இடைவெளி அதிகரித்திருப்பதையடுத்து, இதனை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை இரும்புக்கரம் கொண்டு எடுக்க வேண்டுமென்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நீட் தேர்வு நிறைவு: இயற்பியல் கடினம்; உயிரியல் சற்று எளிமை!

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது. இதில், இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், உயிரியல் கேள்விகள் சற்று எளிமையாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்... மேலும் பார்க்க

ரூ. 40 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் விற்க முயன்ற 3 பேர் கைது!

ராஜஸ்தானில் ரூ. 40 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் விற்க முயன்ற 3 பேரை அம்மாநில காவல் துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழுவினர் கைது செய்தனர். தேர்வு எழுதவிருந்த மாணவரின் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்புக... மேலும் பார்க்க

மும்பையில் புல்லட் ரயில் நிலையம்: ‘வேகமாக நடைபெறும் கட்டுமானப் பணிகள்’

புல்லட் ரயிலின் பயணம் தொடங்கும் நிலையத்தைக் கட்டமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையே பு... மேலும் பார்க்க

ஐஐடி கரக்பூர் விடுதி அறையில் மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுப்பு

ஐஐடி கரக்பூர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்றாம் ஆண்டு மாணவர் கண்டெடுக்கப்பட்டார். மேற்கு வங்க மாநிலம், ஐஐடி கரக்பூரில் பிடெக் மூன்றாம் ஆண்டு மாணவர் முகமது ஆசிப் கமர். இவர், மதன்மோகன் ம... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: சூறைக்காற்றின் போது மரம் விழுந்ததில் 2 பலி, ஒருவர் காயம்

மத்தியப் பிரதேசத்தில் சூறைக்காற்றின் போது மரம் விழுந்ததில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் சூறைக்காற்றின் போது மரம் விழுந்ததில் இரண்டு... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்தது: 3 வீரர்கள் பலி

ஜம்மு-காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் 3 வீரர்கள் பலியானார்கள். ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வீரர்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனம் சாலையை விட்டு விலகி 700 அடி ஆழமுள்ள பள்... மேலும் பார்க்க