செய்திகள் :

``நாட்டுக்காக தற்கொலை வெடிகுண்டோடு பாகிஸ்தானுக்குச் செல்வேன்'' - கர்நாடகா அமைச்சர் ஜமீர் அகமது கான்

post image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்குப் பின்னர், பாகிஸ்தான் நடத்திய தீவிரவாத தாக்குதல்தான் இது என இதுவரைப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டாத இந்திய அரசு, பாகிஸ்தான் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானும் அதற்கு எதிர்வினையாற்றி வருகிறது.

Pahalgam Attack
Pahalgam Attack

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கெதிராகப் போர்ச் சூழல் வந்தால் போராடத் தயாராக இருப்பதாகவும், மோடி, அமித் ஷா தற்கொலை வெடிகுண்டு கொடுத்தாலும் மாட்டிக்கொண்டு செல்வேன் எனவும் கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியிருக்கிறார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கர்நாடக வீட்டுவசதி, வக்ஃப் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சர் ஜமீர் அகமது கான், "நாங்கள் இந்தியர்கள், நாங்கள் இந்துஸ்தானிகள். எங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களுக்கு எதிராகப் போருக்குச் செல்ல வேண்டுமென்றாலும், நான் போராடத் தயாராக இருக்கிறேன்.

ஒரு அமைச்சராக, என்னை அனுப்பினால் முன்னின்று செல்வேன். தேவைப்பட்டால், நான் தற்கொலை வெடிகுண்டையும் அணிவேன். இதை, நகைச்சுவையாகவோ அல்லது உணர்ச்சிவசப்பட்டோ நான் பேசவில்லை. நாட்டிற்கு நான் தேவைப்பட்டால், மோடியும் அமித் ஷாவும் தற்கொலை வெடிகுண்டைக் கொடுக்கட்டும், அதை அணிந்துகொண்டு பாகிஸ்தானுக்குச் செல்வேன்" என்று கூறினார்.

கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் ஜமீர் அகமது கான்
கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் ஜமீர் அகமது கான்

முன்னதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, போர் தொடுப்பதற்கு ஆதரவாகத் தாங்கள் இல்லை என்றும், அமைதி நிலவ வேண்டும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் சோகம்: `படிப்படியாக நாங்கள் மறக்கப்பட்டோம்' - 2 ஆண்டுகள் முடிந்தும் தொடரும் துயரம்!

இந்திய வரலாற்றின் கருப்பு பக்கங்களில் சிகப்பு எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய வரலாறு மணிப்பூருடையது. மே 3, 2023-ம் ஆண்டு இரு சமூக மக்களுக்கிடையே உள்நாட்டுக் கலவரம் தொடங்கி இன்றுடன் சரியாக இரண்டு ஆண்டு... மேலும் பார்க்க

``இந்திய வரலாற்றில் முதல் ஓ.பி.சி பிரதமர் நரேந்திர மோடிதான்..'' - இராம ஸ்ரீநிவாசன்

"முறையான சமூக நீதியை கொண்டு வரவும், அனைவருக்கும் எல்லாம் முறையாக சென்றடையவும் தான் சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் எடுக்கப்பட உள்ளது." என்று பாஜக பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். ... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டு தேர்தல்; திமுக, அதிமுக, பாஜக நடத்திய கூட்டங்கள்.. பரபரக்கும் அரசியல் நகர்வுகள்!

நேற்று அதிமுக செயற்குழு கூட்டம், இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் பாஜகவின் மையக்குழு கூட்டம் என்று இப்போதே தேர்தல் பரபரப்பு தமிழ்நாட்டை பற்றிக் கொண்டுவிட்டது. பிற கட்சிகளுமே ஆலோசனைகள், க... மேலும் பார்க்க

``40 ஆண்டுகள் விசுவாசமா இருக்கும் எனக்கு அந்த பதவி வேண்டாம்..'' - அதிருப்தியில் தேமுதிக நிர்வாகி

கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 30, 2025), தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜய பிரபகாரனை நியமித்தார் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா. இதனையடுத்து சிலர் உயர்மட்ட குழுவின் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர். அந... மேலும் பார்க்க

``நம்முடைய பலமே இது தான்; அமைச்சர்கள் சென்னையில் இருக்காதீர்கள்'' - திமுக கூட்டத்தில் ஸ்டாலின்

தேர்தல் பரபரப்புகள் தொடங்கிவிட்டன. இன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவாட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர்... மேலும் பார்க்க

Doctor Vikatan: வெயிலில் சென்றால் தலைவலி; அலைச்சலைத் தவிர்க்க முடியாதவர்களுக்கு என்ன தீர்வு?

Doctor Vikatan: என் வயது 32. தினமும் 15 கிலோ மீட்டர் பயணம் செய்துதான்வேலைக்குச்செல்கிறேன். டூ வீலரில் செல்கிறேன். அலுவலகத்தை அடைந்ததும்தலைவலி மண்டையைப் பிளக்கிறது. தவிர, எப்போதுமே வெயிலில் அலைந்துவிட்... மேலும் பார்க்க