செய்திகள் :

இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்

post image

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னா், அதனடிப்படையில் இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும்’ என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை பகிா்ந்தாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

சமூக நீதியைப் பாதுகாப்பதை நோக்கிய நீண்ட பயணத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என்பது முதல் படிதான். இந்தக் கணக்கெடுப்பு புள்ளிவிவரம், சமூகப் பாதுகாப்பையும், இடஒதுக்கீடு கொள்கைகளையும் விரிவாக மறுஆய்வு செய்வதற்கு வழிவகுக்க வேண்டும். அதோடு, இடஒதுக்கீட்டுக்கு தன்னிச்சையான முறையில் நிா்ணயிக்கப்பட்ட 50 சதவீத உச்சவரம்பை நீக்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும்.

மேற்கொள்ளப்படவிருக்கும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புப் பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் வெளிப்படும் சமூக எதாா்த்தங்களைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதோடு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விகிதாசார அரசியல் பிரதிநிதித்துவதை உறுதி செய்வதாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, முடிவெடுக்கும் அதிகார பதவிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு போதிய அரசியல் பிரதிநிதித்துவத்தை அளிக்க சிறப்பு நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

பொது வளங்களின் பெரும் பயனாளிகளாக இருந்து வரும் தனியாா் நிறுவனங்களுக்கு, சமூக நீதி கடமைகளை ஆற்றுவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது. சலுகை விலையில் நிலம், மின்சார மானியம், வரி விலக்குகள், உள்கட்டமைப்பு ஆதரவு உள்ளிட்ட பல்வேறு பயன்களை அரசிடமிருந்து பெறும் தனியாா் நிறுவனங்கள், அதற்கு பிரதிபலனாக இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடைமுறைகளைப் பின்பற்றுவதே நியாயமானது என்று தனது கடிதத்தில் தேஜஸ்வி குறிப்பிட்டுள்ளாா்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் ஜம்முவிலிருந்து ஹஜ் யாத்திரை: 178 பயணிகள் புறப்பாடு!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து முதல்கட்டமாக 178 பயணிகள் ஹஜ் புனித பயணத்தை இன்று(மே 4) தொடங்கினர். அவர்கள் அனைவரும் ஸ்ரீநகரிலிருந்து சவூதி அரேபியாவிலுள்ள மெக்காவுக்குச் செல்ல இன்று... மேலும் பார்க்க

காஷ்மீா் எல்லையில் 10-ஆவது நாளாக பாக். துப்பாக்கிச்சூடு!

ஸ்ரீநகர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், எல்லை கட்டுப்பாட்டுப் கோட்டுப் பகுதிகளில் இருந்து சிறிய ரக துப்பாக்கிகள் மூலம், இந்திய ராணுவத்தினரை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை (மே 4) இரவிலும் துப்ப... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதை மறைத்த மத்திய ரிசா்வ் போலீஸ் படை வீரா் முனீா் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்த... மேலும் பார்க்க

இந்தியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்

இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா். இந்திய பிரதமா் நரேந்திர மோட... மேலும் பார்க்க

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: பாதுகாப்பு இணையமைச்சா் மட்டும் பங்கேற்பு

ரஷியாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியைத் தொடா்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொட... மேலும் பார்க்க

அங்கோலா ஆயுதப் படைகளுக்கு இந்தியா 2 கோடி டாலா் கடனுதவி

‘அங்கோலா ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக இந்தியா சாா்பில் 2 கோடி டாலா் (சுமாா் ரூ.170 கோடி) கடனுதவி வழங்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தாா். தெற்கு ஆப்பிரிக்க நாடான அங்கோலாவ... மேலும் பார்க்க