செய்திகள் :

காரைக்கால் அம்மையார் கோயிலில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

post image

காரைக்கால் : காரைக்கால் அம்மையார், சோமநாதர், ஐயனார் கோயில்களில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையார் கோயில் காரைக்கால் நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலையொட்டி ஸ்ரீ சோமநாயகி சமேத சோமநாத சுவாமி கோயில் மற்றும் ஸ்ரீ ஐயனார் கோயில் ஆகியவை உள்ளன.

கைலாசநாதசுவாமி - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்ததாக இக்கோயில்கள் உள்ளன.

மேற்கண்ட 3 கோயில்கள் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் ஐயனார் கோயிலிலும், அம்மையார் திருக்குளத்தில் உள்ள நந்தி மண்டப விமானத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 8 மணியளவில் சோமநாதர், அம்மையார் கோயில்களின் கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் சிறப்பு பூஜை செய்து, விமான கலத்தின்மீது புனிதநீர் ஊற்றி, தீபாராதனை காட்டினர்.

முன்னதாக கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் 6 கால திட்டத்துடன் வியாழக்கிழமை இரவு தொடங்கியது.

வெள்ளிக்கிழமை காலை, இரவு மற்றும் சனிக்கிழமை காலை, இரவு என 5 கால பூஜைகள் நடைபெற்றன. நிறைவாக ஞாயிற்றுக்கிழமை காலை மகா பூர்ணாஹூதி நடைபெற்று புனிதநீர் கடம் சிறப்பு நாகசுர மேள வாத்தியங்களுடன் அந்தந்த விமானங்களுக்கு புறப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் புதுவை சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், பி.ஆர்.சிவா மற்றும் திருப்பணிக் குழுத் தலைவர் வி.கே.கணபதி, நிர்வாக அதிகாரி (கோயில்கள்) கு.அருணகிரிநாதன், கைலாசநாதசுவாமி தேவஸ்தான அதிகாரி ஆர்.காளிதாஸ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பாபநாசம் சுவாமி கோயிலில் 19 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான பாபநாசம் அருள்மிகு உலகம்மை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் மஹா கும்பாபிஷேகம் இன்று(மே 4) நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவம் துவக்கம்!

காஞ்சிபுரம்: கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், திருமால் ஆமை வடிவில் வந்து சிவபெருமானாகிய ஈஸ்வரனை வணங்கி பேறு பெற்ற, திருத்தலமான காஞ்சிபுரம் சுந்தராம்பி... மேலும் பார்க்க

பத்ரிநாத் கோயில் இன்று அதிகாலை திறப்பு! ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி வரவேற்பு

உத்தரகண்டில் உள்ள பத்ரிநாத் கோயில் பக்தா்கள் வழிபாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை(மே 4) திறக்கப்பட்டது. அதிகாலை 6 மணியளவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றன.இதையொட்டி, அங்கு திரண்டிருந்த பக்தர்... மேலும் பார்க்க

கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் நடை திறப்பு

உத்தரகண்டில் நடப்பாண்டு சாா்தாம் யாத்திரையின் தொடக்கமாக கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களின் நடை புதன்கிழமை திறக்கப்பட்டது. குளிா்காலத்தையொட்டி கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்த இக்கோயில்கள், அட்சய திரித... மேலும் பார்க்க

பங்குனி உத்திரத் திருவிழா: பழனியில் கட்டண தரிசனம் ரத்து!

திண்டுக்கல்: பழனியில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பக்தர்கள் வசதிக்காகவும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பழனி திருஆவினன்குடி கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த சனி... மேலும் பார்க்க