செய்திகள் :

ஒரே ஓவரில் 33 ரன்கள் அளித்த கலீல் அகமது குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் கூறியதென்ன?

post image

தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த ஒரே ஓவரில் 33 ரன்கள் அளித்த கலீல் அகமதை நம்புவதாக சிஎஸ்கேவின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் கூறியுள்ளார்.

பெங்களூரு சின்னசாமி திடலில் நேற்றிரவு (மே.3) நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்சிபி 213/5 ரன்கள் எடுத்தது.

கலீல் அகமது வீசிய 19ஆவது ஓவரில் 33 ரன்களை ஆர்சிபி அணியின் ரொமாரியோ ஷெப்பர்டு விளாசினார். மொத்தமாக கலீல் அகமது 3 ஓவர்களில் 65 ரன்களை வாரி வழங்கினார்.

அடுத்ததாக விளையாடிய சிஸ்கே அணி 20 ஓவர்களில் 211/5 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் 15 ரன்கள் என்ற இலக்கை எட்டமுடியாமல் சிஎஸ்கே அணி தோல்வியுற்றது.

இது குறித்து சிஎஸ்கேவின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் கூறியதாவது:

இந்த சீசனில் கலீல் அகமது எங்களுக்கு சிறப்பாக செய்துள்ளார். அதனால் அன்ஷுல் கம்போஜுக்குப் பதிலாக கலீல் அகமதை தோனி நம்பியதில் தவறில்லை.

கம்போஜ் தனக்குக் கொடுக்கப்பட்ட பங்கினை சிறப்பாக செய்து வருகிறார். அவருக்கு டெத் ஓவரிலும் பந்துவீசும் திறமை இருக்கிறது. அவரும் நல்ல ஆப்ஷந்தான். ஆனால், கலீலை எடுத்துவந்ததால் இப்படி ஆகுமென யாரும் நினைக்கவில்லை.

ஒரு பெரிய ஓவர் கிடைத்திருந்தாலும் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். ஆனால், ஆர்சிபி அணியினர் நன்றாக பந்துவீசினார்கள்.

கடைசியில் மலையேற்றம்போல கடினமாக இருக்குமெனத் தெரியும். ஆனால், நாங்கள் நல்ல ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடினோம்.

இந்தப் போட்டியில் நன்றாக விளையாடினோம். இருப்பினும் கடைசி ஓவர்களில் ஃபீல்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தாண்டு மிகவும் தடுமாற்றமாகவே இருக்கிறது. ஆனால், சில தனிப்பட்ட வீரர்களின் செயல்பாடுகள் பெருமைகொள்ளும் விதமாக இருக்கின்றன.

அடுத்தாண்டு நல்ல அணியாக வருவோம். இருப்பினும் அனுபவம் வாய்ந்த வீரர்களை மிகவும் நம்புகிறோம் என்றார்.

டெவால்டு ப்ரீவிஸ் ஆட்டமிழப்பு: மீண்டும் சர்ச்சையாகும் நடுவரின் தீர்ப்பு!

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் டெவால்டு ப்ரீவிஸ் ஆட்டமிழப்பு சர்ச்சையானது. பெங்களூரு சின்னசாமி திடலில் நேற்றிரவு (மே.3) நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்சிபி 213/5 ரன்கள் எடுத்தத... மேலும் பார்க்க

தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: தோனி

ஆர்சிபிக்கு எதிராக 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற போட்டிக்கு தான் பொறுப்பேற்பதாக தோனி கூறியுள்ளார்.பெங்களூரு சின்னசாமி திடலில் நேற்றிரவு (மே.3) நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்சிபி 213... மேலும் பார்க்க

ஆயுஷ் மாத்ரே, ஜடேஜா அதிரடி வீண்! சென்னை போராடி தோல்வி!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி முதலில் பேட... மேலும் பார்க்க

ஷெப்பர்ட் அதிவேக அரைசதம்: சென்னை அணிக்கு 214 ரன்கள் இலக்கு

சென்னைக்கு எதிரான அட்டத்தில் ஷெப்பர்ட்டின் அதிவேக அரைசதத்தால் பெங்கரூரு அணி 213 ரன்கள் குவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக... மேலும் பார்க்க

இந்திய அணியின் சிறந்த கேப்டனாக மாறவிருக்கும் ஷுப்மன் கில்: ரஷித் கான்

இந்திய அணியின் மிகவும் சிறந்த கேப்டனாக ஷுப்மன் கில் மாறப்போவதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் ... மேலும் பார்க்க

ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மாற்றமில்லை!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூ... மேலும் பார்க்க