செய்திகள் :

சென்னை: அதிமுக பெண் நிர்வாகிக்கு ஆபாச சைகை; காவலர் மீது வழக்கு பதிவு.. நடந்தது என்ன?

post image

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகியான 33 வயது பெண் கடந்த 30-ந்தேதி நள்ளிரவு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளைப் பின்தொடர்ந்து வந்தவர், திடீரென அதிமுக பெண் நிர்வாகிக்கு முத்தம் கொடுப்பது உள்ளிட்ட ஆபாச சைகளை செய்திருக்கிறார்.

அதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தன்னுடைய கணவரிடம் விவரத்தைக் கூறியிருக்கிறார். இதையடுத்து ஆபாச சைகளை செய்தவரைப் பிடித்த அதிமுக பெண் நிர்வாகியின் கணவர், ஏன் இப்படி செய்கிறீர்கள் என சத்தம் போட்டிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

உடனடியாக காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு ஓட்டேரி போலீஸார் வந்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் அதிமுக பெண் நிர்வாகிக்கு ஆபாச சைகை செய்த குற்றச்சாட்டில் சிக்கியவர் காவலர் தினேஷ் என்று தெரியவந்தது. மேலும் அவர் மதுபோதையில் இருந்ததாக அதிமுக பெண் நிர்வாகி குற்றம் சாட்டினார்.

காவலர்

இதையடுத்து காவலர் தினேஷ் மீது போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இந்தத் தகவல் உயரதிகாரிகளுக்கு தெரியவந்ததும் காவலர் தினேஷ் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில் காவல் தினேஷ், தன்னை அதிமுக பெண் நிர்வாகியின் கணவர் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் அதிமுக பெண் நிர்வாகியின் கணவர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

சென்னை: ஆபாச பதிவு.. பெண்ணுக்கு காதல் டார்ச்சர் கொடுத்த நீச்சல் பயிற்சியாளர் கைது

சென்னை ராஜமங்கலம் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நீச்சல் பயற்சியாளர் பாலாஜி என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக நாங்... மேலும் பார்க்க

துபாய் டிராவல்ஸ் அதிபருக்கு கோவையில் ஸ்கெட்ச் - குடும்பத்தோடு சிக்கிய காதலி; பகீர் பின்னணி

திருவாரூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சிகாமணி (47). சிகாமணிக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவி உள்ளார். சிகாமணி துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இதனிடையே சிகாமணி கடந்த ஏப்ரல் மாதம் கடைசிய... மேலும் பார்க்க

குறிவைக்கப்படும் முதியவர்கள்; மேற்கு மண்டலத்தில் தொடரும் ஆதாயக் கொலைகள்; பின்னணி என்ன?

மேற்கு மண்டலத்தின் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.இந்த இரண்டு மாவட்டங்களிலும் பெரும்பாலானவை கிராமப் பகுதிகளாக உள்ளதால், விவசாயிகள் தோட்டத்து வீட்டில் அதி... மேலும் பார்க்க

பள்ளி மதிய உணவில் விழுந்த பாம்பு; சாப்பிட்ட 100 மாணவர்கள் பாதிப்பு! - NHRC விசாரணை, நடந்தது என்ன?

மதிய உணவுத் திட்டம் கல்வி மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியமானது. இதில் நடைபெறும் தவறுகள் நிறைய குழந்தைகளின் உயிருக்கும், உடல்நலத்துக்கும் ஆபத்து விளைவிக்கும். அரசு திட்டங்களை பாதுகாப்புடன் செ... மேலும் பார்க்க

சென்னை: காதலிக்க மறுத்த மாணவி... பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ஐடி ஊழியர் - அதிர்ச்சி சம்பவம்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர், தாழம்பூர் காலல் நிலையம் பின்புறத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். மாணவியைச் சந்திக்க அவர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பாஜக அமைச்சர் பங்கஜா முண்டே-க்கு ஆபாச `மெசேஜ்' அனுப்பியவர் கைது; சைபர் கிரைம் விசாரணை

மகாராஷ்டிராவில் அமைச்சராக இருக்கும் பங்கஜா முண்டே-க்கு கடந்த சில நாள்களாக மர்ம நபர் ஒருவர் அடிக்கடி போன் செய்து ஆபாசமாக பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தான். அதோடு பங்கஜா முண்டேயின் போனுக்கு ஆபாச மெசேஜ்களை... மேலும் பார்க்க