செய்திகள் :

சென்னை: காதலிக்க மறுத்த மாணவி... பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ஐடி ஊழியர் - அதிர்ச்சி சம்பவம்

post image

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர், தாழம்பூர் காலல் நிலையம் பின்புறத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். மாணவியைச் சந்திக்க அவரின் உறவினரான ரத்தினகுமார் (25) என்பவர் விடுதிக்கு வந்திருந்தார். இருவரும் விடுதியின் முன்பு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரத்தினகுமார், கல்லூரி மாணவியின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அதனால் மாணவி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அலறி துடித்தார். அதைப்பார்த்தவர்கள் அங்கு ஓடிவந்தனர். அதனால் ரத்தினகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தீ

பின்னர் தீயை அனைத்த அப்பகுதி மக்கள், மாணவியை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து தாழம்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தாழம்பூர் போலீஸார் வழக்கு பதிந்து ரத்தினகுமாரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் ரத்தினகுமாரை மாணவி காதலிக்க மறுத்ததால் இந்த விபரீத செயலில் ரத்தினகுமார் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து தாழம்பூர் போலீஸார் கூறுகையில், ``மாணவி பி.டெக் படித்து வருகிறார். இவரும் ரத்தினகுமாரும் உறவினர்கள். அதனால் ரத்தினகுமாருடன் மாணவி பழகி வந்திருக்கிறார். ரத்தினகுமார் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அதனால் மாணவியை அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம்.

ரத்தினகுமார்

சம்பவத்தன்று இருவரும் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது மாணவியிடம் ரத்தினகுமார் தன்னுடைய காதலை கூறிய சமயத்தில் அதை மாணவி ஏற்கவில்லை. அதனால் ஆத்திரமடைந்த ரத்தினகுமார், `எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது' என்று கூறியப்படி மாணவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த வழக்கில் ரத்தினகுமாரைக் கைது செய்திருக்கிறோம். மாணவியும் ரத்தினகுமாரும் உறவினர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றனர்.

குறிவைக்கப்படும் முதியவர்கள்; மேற்கு மண்டலத்தில் தொடரும் ஆதாயக் கொலைகள்; பின்னணி என்ன?

மேற்கு மண்டலத்தின் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.இந்த இரண்டு மாவட்டங்களிலும் பெரும்பாலானவை கிராமப் பகுதிகளாக உள்ளதால், விவசாயிகள் தோட்டத்து வீட்டில் அதி... மேலும் பார்க்க

பள்ளி மதிய உணவில் விழுந்த பாம்பு; சாப்பிட்ட 100 மாணவர்கள் பாதிப்பு! - NHRC விசாரணை, நடந்தது என்ன?

மதிய உணவுத் திட்டம் கல்வி மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியமானது. இதில் நடைபெறும் தவறுகள் நிறைய குழந்தைகளின் உயிருக்கும், உடல்நலத்துக்கும் ஆபத்து விளைவிக்கும். அரசு திட்டங்களை பாதுகாப்புடன் செ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பாஜக அமைச்சர் பங்கஜா முண்டே-க்கு ஆபாச `மெசேஜ்' அனுப்பியவர் கைது; சைபர் கிரைம் விசாரணை

மகாராஷ்டிராவில் அமைச்சராக இருக்கும் பங்கஜா முண்டே-க்கு கடந்த சில நாள்களாக மர்ம நபர் ஒருவர் அடிக்கடி போன் செய்து ஆபாசமாக பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தான். அதோடு பங்கஜா முண்டேயின் போனுக்கு ஆபாச மெசேஜ்களை... மேலும் பார்க்க

தேனி: இடப்பிரச்னையில் இருவர் வெட்டிக்கொலை; ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது - நடந்தது என்ன?

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் வசித்து வருபவர் சுந்தர் (55). இவர் வீட்டின் எதிர்ப்புறம் வசித்து வருபவர் ராஜேந்திரன் (60). இருவருக்கும் கடந்த ஓராண்டாக இடப்பிரச்னை இருந்து வந்த... மேலும் பார்க்க

ஈரோடு: தோட்டத்து வீட்டில் வசித்த வயதான தம்பதி அடித்துக் கொலை; நகைகள் கொள்ளை; என்ன நடந்தது?

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி வெளாங்காட்டு வலசு பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமசாமி (75).இவரது மனைவி பாக்கியம்மாள் (65). இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கொடி: "என்னை விட்டுடுங்க" - சிறுவனைச் சிறுநீர் கழிக்கக் கட்டாயப்படுத்திய கும்பல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.உத்தரப்பிரதேச மாநில அலிகர் பகுதியில் சாலையில் பாகிஸ்தான் கொடி கிடந்திருக்கிறது. அந்த வழ... மேலும் பார்க்க