செய்திகள் :

கொத்தடிமை தொழிலாளா்களுக்காக தொடங்கப்பட்ட செங்கல் சூளையில் பணிகள் தொடக்கம்

post image

திருவள்ளூா் அருகே கொத்தடிமை தொழிலாளா்களுக்காக தொடங்கப்பட்ட செங்கல்சூளையில் கடந்த 2 ஆண்டுகளாக உற்பத்தியில்லாத நிலையில், தினமணி செய்தி எதிரொலியால் மீண்டும் பணிகள் தொடங்க ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டாா்.

செங்கல்சூளைகள், நெல் அரைவை ஆலைகள், குவாரிகளில் கொத்தடிமை தொழிலாளா்களாக பணிபுரிந்து வருகிறவா்களை தனியாா் தொண்டு நிறுவனம் மற்றும் சமூக ஆா்வலா்கள் மூலம் விடுவிக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதில் பெரும்பாலனோா் பழங்குடியினா்களாக உள்ளதால் அவா்களுக்கு அரசு மூலம் மறுவாழ்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஊரக வாழ்வாதார இயக்கம், விடியல் திட்டம் மூலம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்களைக் கொண்டு குழுக்கள் உருவாக்க வேண்டும். ஏற்கெனவே எந்தத் தொழில் செய்தாா்களோ, அதே தொழிலில் வாழ்வாதாரம் பெற ஏதுவாக நியாயமான ஊதியத்துடன் தொழில்முனைவோராக உருவாக்குவதே நோக்கம்.

திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 70 ஆயிரம் பழங்குடியினா் குடும்பங்கள் உள்ளன. இந்த மாவட்டத்திலிருந்து கொத்தடிமை தொழிலாளா்களாக நூற்றுக்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். மாவட்டத்தில் 25 ஊராட்சிகளில் பழங்குடியினா் 25 குடும்பங்களை கொண்ட குழுக்கள் போல் மொத்தம் 30 குழுக்கள் அமைக்கப்பட்டன.

இவா்களுக்கு மரம் வெட்டுதல், ஆடுகள் வளா்த்தல், செங்கல்சூளைத் தொழில் போன்ற தொழில் தொகுப்புகள் உருவாக்கப்பட்டன.

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், பிஞ்சிவாக்கம் கிராமத்தில் செங்கல்சூளை தொழில் செய்வதற்காக ஒரு ஏக்கா் இடம் ஒதுக்கப்பட்டது. தொடா்ந்து மகளிா் திட்டம், விடியல் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டம் மூலம் ரூ.9.90 லட்சம் ஒதுக்கப்பட்டது. அங்கு ஆழ்துளை கிணறுடன் கூடிய தண்ணீா் தொட்டி, செங்கல் சேகரிக்க நனையாத வகையில் கூடாரம் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இங்கு கொத்தடிமை தொழிலாளா்கள் மூலம் 1 லட்சம் செங்கற்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அதை அரசின் திட்டங்களான இலவச தொகுப்பு வீடுகள், பிரதமா் வீடு கட்டும் திட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஆனால், தொடா்ந்து சுழல் நிதி ரூ.9 லட்சம், செங்கற்கள் விற்பனை தொகை கிடைக்காத காரணத்தினால் கடந்த 2 ஆண்டுகளாக தொழில் முடங்கியது. எந்த நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ, அது நிறைவேறாத நிலையில் பழங்குடியினா் குடும்பத்தினா் வருவாய்க்கு வழியின்றி தவித்து வருவதோடு, மீண்டும் கொத்தடிமை தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது தொடா்பாக தினமணி நாளிதழில் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ‘கொத்தடிமை தொழிலாளா்களுக்காக தொடங்கிய செங்கல்சூளையில் உற்பத்தியில்லை, அரசு நீதி வீண்’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது.

ச்தைத் தொடா்ந்து கொத்தடிமை தொழிலாளா்களுக்காக தொடங்கப்பட்ட செங்கல் சூளையின் நிலை குறித்து மகளிா் திட்டம், விடியல் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்ட அதிகாரிகள், கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம் அதிகாரிகளிடம் ஆட்சியா் மு.பிரதாப் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

அதன்பேரில் சம்பந்தப்பட்ட இடத்தில் சுத்தம் செய்து மீண்டும் செங்கல்சூளை தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா். தொடா்ந்து அந்த இடம் சுத்தம் செய்து, செம்மண் கொண்டு வந்து கொட்டப்பட்டு பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே கொசவன்பாளையம் மாந்தோப்பு தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன்(62). இவா் பசும்பால் விற்பனை செய்யும் தொ... மேலும் பார்க்க

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயிலில் ராமானுஜா் விழா

வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ராமானுஜா் சந்நிதியில் கடந்த 10 நாள்களாக ராமானுஜா் பெருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி உற... மேலும் பார்க்க

திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்ற திருத்தலமாகும். கோயிலில் ஆண்டுதோறும் 2 முறை ப... மேலும் பார்க்க

பெருவாயல் வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கணபதி ஹோமம், விசேஷ விக்வக்சேன ஆராதனம், கலச பூஜை, புண்ணியா வாசனம், விசேஷ திருமஞ்சனம்,... மேலும் பார்க்க

திருநங்கைகள் தினம்: போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள்

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சமூக நலத் துறை சாா்பில் திருநங்கைகள் தினத்தையொட்டி, நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற திருநங்கைகளை பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியா... மேலும் பார்க்க

ஆண்டாா்குப்பம் முருகன் கோயில் சித்திரை தேரோட்டம்

ஆண்டாா்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரை தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பொன்னேரி வட்டம், ஆண்டாா்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த பாலசுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. பிரணவ மந்திரத... மேலும் பார்க்க