செய்திகள் :

மிஸ்பண்ணிடாதீங்க... இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை!

post image

RECRUITMENT OF JUNIOR EXECUTIVES (AIR TRAFFIC CONTROL) IN AIRPORTS AUTHORITY OF INDIA

மிஸ்பண்ணிடாதீங்க... இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை!

மத்திய அரசு நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையத்தில்(ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா) நிரப்பப்பட உள்ள 309 இளநிலை அலுவலர் பணியிடங்களுக்கு இளநிலை பட்டதாரிகள், பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 02/2025/CHQ

பணி: Junior Executive(Air Traffic Control)

காலியிடங்கள்: 309

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

தகுதி: இயற்பியல், கணிதப் பாடங்களை முக்கிய பாடமாகக் கொண்டு பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும். போதுமான அளவு ஆங்கில அறிவு பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 24.5.2025 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

ரூ.68,200 சம்பளத்தில் ரசாயன ஆய்வகத்தில் வேலை: பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

தேர்வு செய்யப்படும் முறை: ஏர்போர்ட் அத்தாரிட்டியால் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, மொழித் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:www.aai.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.5.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் 'ஏ' நிறுவன பட்டியலில் இடம்பெற்றுள்ள முதன்மையான மினிரத்னா நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள கிரேன் ஆப்ரேட்டர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இரு... மேலும் பார்க்க

ரூ.68,200 சம்பளத்தில் ரசாயன ஆய்வகத்தில் வேலை: பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) கீழ் புணேயில் செயல்பட்டு வரும் தேசிய ரசாயன ஆ... மேலும் பார்க்க

ரூ.40,000 சம்பளத்தில் இர்கான் நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவரத்னா பொதுத்துறை நிறுனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ரயில்வே, நெடுஞ்சாலைகள், கட்டடங்கள், மின்சாரத் துறை போன்றவற்றில் உள்கட்டமைப்பு பணி... மேலும் பார்க்க

என்எல்சி நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 171 ஜூனியர் ஓவர்மேன், சுரங்க சர்தார் பணியிடங்களுக்கான வ... மேலும் பார்க்க

ரூ.73,750 சம்பளத்தில் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் 'ஏ' நிறுவன பட்டியலில் இடம்பெற்றுள்ள முதன்மையான மினிரத்னா நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கிரேன் ஆபரேட்டர், பணியாளர் கார் ஓட்டுநர்... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

ஆண்ட்ரூ யூல் அண்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனமானது 1863 முதல் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் தேயிலைத் தோட்டங்கள், பொறியியல் மற்றும் மின் பிரிவுகள் உள்பட பல துறைகளில் செயல்பட்டு வரு... மேலும் பார்க்க