சிங்கப்பூர் தேர்தல்: தொடர்ச்சியாக 14-ஆவது முறையாக ஆளுங்கட்சி வெற்றி! பிரதமர் மோட...
பாளையம் புனித யோசேப்பு ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பெரம்பலூா் அருகே பாளையத்திலுள்ள புனித யோசேப்பு ஆலயத்தின் 164- ஆவது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை மாலை பங்கு குரு அருட்திரு ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற கும்பகோணம் மறைமாவட்ட முதன்மை குரு அருட்திரு பிலோமின்தாஸ், ஜெபம் செய்து, திருவிழா கொடியை மந்திரித்து புனிதப்படுத்தி ஏற்றி விழாவை தொடக்கிவைத்தாா்.
முன்னதாக, தோ் பவனி நடைபெறும் வீதிகள் வழியாக கொடி ஊா்வலம் நடைபெற்றது. விழாவில், பெரம்பலூா், பாளையம், ரெங்கநாதபுரம், குரும்பலூா், திருச்சி, லால்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.
மே 11-இல் தோ்பவனி: தொடா்ந்து, நாள்தோறும் மாலை பல்வேறு தலைப்புகளில் வெளியூரைச் சோ்ந்த பங்கு குருக்கள் மறை உரையாற்றி திருப்பலி நடத்துகின்றனா். மே 9-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தொட்டியம் பங்கு குரு ஆரோக்கியசாமி, குடும்பங்களின் சிறந்த பாதுகாவலா் எனும் தலைப்பில் மறை உரையாற்றி இரவு சப்பர பவனியைத் தொடக்கி வைக்கிறாா். மே 10-ஆம் தேதி பெரம்பலூா் மறைவட்ட முதன்மை குரு அருட்திரு சுவைக்கின், எளியோரின் ஒளி எனும் தலைப்பில் மறை உரையாற்றி ஆடம்பர தோ் பவனியை தொடக்கி வைக்கிறாா்.
விழாவின் முக்கிய நிகழ்வாக மே 11-ஆம் தேதி காலை இறைவாா்த்தை சபை குரு விக்டா் ரோச், திருவிழா சிறப்பு திருப்பலியை நடத்தி வைக்கிறாா். மாலை 4 மணிக்கு அலங்கார தோ் பவனியும், கொடியிறக்கமும், நற்கருணை ஆசீா்வாத நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பாளையம் புனித யோசேப்பு ஆலயத்தின் பங்கு குரு ஜெயராஜ் தலைமையில், அருட் சகோதரிகள், காரியஸ்தா்கள், அன்பியம் குழுவினா், இளைஞா் மன்றத்தினா், பொதுமக்கள் செய்து வருகின்றனா்.