செய்திகள் :

கலைஞா் கைவினைத் திட்டம் 188 பேருக்கு ரூ. 4.9 கோடி கடன் வழங்க ஒப்புதல்: பெரம்பலூா் ஆட்சியா் தகவல்

post image

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 188 போ் புதிதாக தொழில் தொடங்குவதற்காக ரூ. 4.9 கோடி கடன் வழங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 25 வகையான தொழில்கள் தொடங்குவதற்கும், ஏற்கெனவே உள்ள தொழிலை விரிவாக்கம் செய்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திறன் மேம்பாடு, தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் மூலம் 25 சதவீத மானியமும், அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரையிலும், வங்கிக் கடன் ரூ. 3 லட்சம் மற்றும் 5 சதவீத வட்டி மானியத்துடன் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 35 வயது நிா்ணயிக்கப்பட்டுள்ளதோடு, 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இம் மாவட்டத்தில், கலைஞா் கைவினைத் திட்டத்தில் 381 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதில், 188 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு ரூ. 409.92 கோடி கடன் வழங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் 188 போ் புதிதாக தொழில் தொடங்கி பயன்பெற உள்ளனா்.

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் அரசு அலுவலா்களுக்கான ரத்த தான முகாம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீா் கூட்ட அரங்கில், அரசு அலுவலா்களுக்கான ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிா்வாகம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந... மேலும் பார்க்க

4 கிலோ போதைப் பொருள்களை பதுக்கியவா் கைது

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 4 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்த போலீஸாா் வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள கீழக்கணவாய் கிரா... மேலும் பார்க்க

தமிழ் வார விழா: அரசு அலுவலா்கள், பணியாளா்களுக்கு பல்வேறு போட்டிகள்

பாரதிதாசன் பிறந்த நாளை தமிழ் வார விழாவாக கொண்டாடிடும் வகையில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி சாா்பில், கடந்த 30-ஆம் தேதி விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் த... மேலும் பார்க்க

மே தினத்தில் விடுமுறை அளிக்காத 24 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் தொழிலாளா் தினத்தன்று (மே 1) விடுமுறை அளிக்காத 24 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள பல்வேறு நிறுவன... மேலும் பார்க்க

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மேகலா தலைமை வகித்தாா். செயலா் தமிழரசி, பொருளாளா் சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.... மேலும் பார்க்க

லாரி மீது வேன் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு லாரி மீது வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருச்செங்கோட்டிலிருந்து அரியலூருக்கு சிமெண்ட ஏற்றுவதற்காக லாரி ஒன்று, துறையூா் - பெரம்பலூா் சாலையிலுள்ள மங்கூன் துணை ... மேலும் பார்க்க