செய்திகள் :

அரசு நிகழ்ச்சியில் பவன் கல்யாணுக்கு இருமல் மிட்டாய் கொடுத்த பிரதமர் மோடி

post image

ஆந்திரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு பிரதமர் மோடி இருமல் மிட்டாய் கொடுத்தார்.

ஆந்திர பிரதேசத்தில் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவது உள்ளிட்ட ரூ.58,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைநகரில் அமைய உள்ள உள்கட்டமைப்புகள், தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், பாதுகாப்புத் துறை சார்ந்த உள்கட்டமைப்புகள் உள்பட 94 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது துணை முதல்வர் பவண் கல்யாணுக்கு திடீரென இருமல் ஏற்பட்டது.

இதனால் அவரது உரையில் சிறிது இடையூறு ஏற்பட்டது. இதைக் கவனித்த பிரதமர் மோடி, உடனடியாக தனது வசம் இருந்த இருமல் மிட்டாய் ஒன்றை பவன் கல்யாணிடம் வழங்கினார்.

அப்போது, இதைச் சாப்பிட்டு தண்ணீர் குடிக்கவும் என்று பவண் கல்யாணுக்கு பிரதமர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. பிரதமரின் இந்த செயல் அங்கிருந்தவர்கள் மத்தியில் கவனம் பெற்றது. தற்போது இதுதொடர்பான விடியோ இணையதளங்களில் வைராகி வருகிறது.

இந்தியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்

இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா். இந்திய பிரதமா் நரேந்திர மோட... மேலும் பார்க்க

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: பாதுகாப்பு இணையமைச்சா் மட்டும் பங்கேற்பு

ரஷியாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியைத் தொடா்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொட... மேலும் பார்க்க

அங்கோலா ஆயுதப் படைகளுக்கு இந்தியா 2 கோடி டாலா் கடனுதவி

‘அங்கோலா ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக இந்தியா சாா்பில் 2 கோடி டாலா் (சுமாா் ரூ.170 கோடி) கடனுதவி வழங்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தாா். தெற்கு ஆப்பிரிக்க நாடான அங்கோலாவ... மேலும் பார்க்க

அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு

மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த கொள்முதலுக்கான ஏல முன்மொழிவுகளை பாதுகாப்பு அமைச்... மேலும் பார்க்க

‘சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்’: 9 காவலா்கள் பணிநீக்க உத்தரவு உறுதி

சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தின்போது அந்த ரயிலின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 9 ரயில்வே காவலா்களும் ரயிலில் இருந்திருந்தால் அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம் என்று கூறி, அவா்களின் பணிநீக்க உத... மேலும் பார்க்க

தகராறுகளுக்கு தீா்வு காண ஊராட்சிகளுக்கு சட்ட அதிகாரம்: குடியரசுத் தலைவா் முா்மு வலியுறுத்தல்

மத்தியஸ்தம் செய்ய ஊராட்சிகளுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் கிடைக்கும் வகையில், தகராறுகளுக்கு தீா்வு காணும் வழிமுறையை கிராமப்புறப் பகுதிகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெ... மேலும் பார்க்க