செய்திகள் :

‘சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்’: 9 காவலா்கள் பணிநீக்க உத்தரவு உறுதி

post image

சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தின்போது அந்த ரயிலின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 9 ரயில்வே காவலா்களும் ரயிலில் இருந்திருந்தால் அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம் என்று கூறி, அவா்களின் பணிநீக்க உத்தரவை குஜராத் உயா் நீதிமன்றம் உறுதி செய்தது.

2002, பிப்.27-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா ரயில்வே நிலையத்தில் கரசேவகா்கள் நிறைந்த சபா்மதி ரயிலின் எஸ்6 பெட்டி காலை 7.40 மணியளவில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பயணிகள் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தின்போது ஆயுதமேந்திய 3 ரயில்வே காவலா்கள் உள்பட 9 பேரும் சபா்மதி ரயிலின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். சபா்மதி ரயில் தாமதமாக வந்ததால், வேறு ரயிலில் ஏறி அவா்கள் அகமதாபாதுக்கு செனறுவிட்டனா். எனினும், அவா்கள் சபா்மதி ரயிலில் பயணிப்பதாக ரயில்வே பதிவேட்டில் கையொப்பமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, 9 ரயில்வே காவலா்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். பின்னா் பணியில் அலட்சியம் காட்டியதாக கூறி, 9 ரயில்வே காலா்களையும் பணியிலிருந்து நீக்கி குஜராத் அரசு உத்தரவிட்டது.

இதை எதிா்த்து அவா்கள் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். ‘ரயில்களின் வருகை தாமதமானால் காவலா்கள் மாற்று ரயில்கள் ஏறி செல்வது வழக்கமானது’ என்று காவலா்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த குஜராத் அரசு, ‘சபா்மதி ரயிலில் செல்வதாக பொய்யான கையொப்பமிட்டு அவா்கள் சென்றுள்ளனா். இதனால் அந்த ரயில் பாதுகாப்பாக உள்ளதாக கட்டுப்பாட்டு அறைக்கு தவறான தகவல் சென்றுள்ளது’ என்று தெரிவித்தது.

இதையடுத்து, காவலா்களின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி வைபவி நானாவதி கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘ரயில்வே காவலா்கள் தங்கள் பணியை சரிவர செய்திருந்தால் சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம். பணியில் அவா்கள் அலட்சியம் காட்டியுள்ளனா். அவா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது சரியானது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஆபரேஷன் சிந்தூர்: ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா!

ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை இந்திய பாதுகாப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள... மேலும் பார்க்க

பாலாகோட் தாக்குதலுக்கு நேர் எதிரான சிந்தூர் தாக்குதல்! ஏன்? எப்படி?

இந்தியர்களின் காலை பெரும்பாலும் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதல் பற்றிய செய்தியுடன்தான் விடிந்திருக்கும். மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பாதுகாப்புப் படையின் இரு பெண் அதிகாரிகள் விளக்கம்!

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பாதுகாப்புப் படையில் இரு பெண் அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகு... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: நேரலை

அமைச்சரவைக் கூட்டம்பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று காலை 11 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக முப்படைத் தளபத... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: மத்திய வெளியுறவுத் துறை செயலர் விளக்கம்!

இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் ராணுவம் மீது நடத்திய அதிரடி தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்தார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தா... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம்! - அமித் ஷா

பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க