செய்திகள் :

Operation Sindoor: `நாங்கள் ராணுவத்துடன் நிற்கிறோம்’ - ஜம்மு - காஷ்மீர் மக்கள்

post image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஆபரேஷன் சிந்தூர் என்றப் பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் தீவிரவாதக் குழுவின் தலைமை இடங்கள், பயிற்சி மையங்கள் குறி வைத்து தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், இந்தத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும், 35 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது.

இந்த தாக்குதல் குறித்து ஜம்மு கஷ்மீரில் வாழும் மக்கள் இந்திய ராணுவத்தைப் பாராட்டி 'இந்திய ராணுவம் ஜிந்தாபாத்' 'பாரத் மாதா கி ஜெய்' போன்ற கோஷங்கள் எழுப்புவதாக வீடியோ வெளியாகியிருக்கிறது.

தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய கஷ்மீரில் வாழும் ஒருவர் ``நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என நாங்கள் காத்திருந்தோம். இந்தத் தாக்குதல் ஆதாரத்துடன் நடந்துள்ளது. இந்த முறை யாரும் எந்த ஆதாரத்தையும் கேட்கப் போவதில்லை. நாங்கள் ராணுவத்துடன் நிற்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

உலகத் தலைவர்கள் இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர், ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் இணைந்தும் உள்ளனர்.

Operation Sindoor: "இந்தியாவின் தாக்குதல் நியாயமானது!" - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ஆதரவு

தீவிரவாதிகள் குழுவினர் ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்தச் ... மேலும் பார்க்க

Operation Sindoor: "நம் அப்பாவி மக்களைக் கொன்றவர்களை மட்டுமே குறிவைத்தோம்" - ராஜ்நாத் சிங் விளக்கம்

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: '1000 இளைஞர்களுடன் யுத்த களத்திற்கு செல்ல தயார்'- கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்த... மேலும் பார்க்க

Operation Sindoor: `இந்திய ராணுவ நடவடிக்கையை வரவேற்கிறேன்; அதேசமயம் இது..."- திருமாவளவன் சொல்வதென்ன?

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் குழுவினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்க... மேலும் பார்க்க

`போர் வேண்டாம்; பாகிஸ்தான் பெரிய பிரச்னையாக மாற்றாமல் இருக்க வேண்டும்' - ஒமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு எத... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூருக்கு முன்... பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய இரண்டு பதிலடி தாக்குதல் பற்றி தெரியுமா?

ஆபரேஷன் சிந்தூர் என்றப் பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹாவல்பூர், முரிட்கே, சியால்கோட்... மேலும் பார்க்க