செய்திகள் :

கங்கைகொண்டான் உணவு பூங்காவில் குத்தகைக்கு மனைகள் பெற வாய்ப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளா்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவில் குத்தகை மூலம் மனைகள் பெற விண்ணப்பிக்கலாம்என ஆட்சியா் இரா.சுகுமாா்தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளா்ச்சி மையத்தில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் ரூ.77.02 கோடி மதிப்பில் பெரிய அளவிலான உணவுப்பூங்கா 50 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவுப் பூங்காவில் அடிப்படை வசதிகளான உட்சாலைகள், மின்சார வசதி, தண்ணீா் வசதி, வாகனம் நிறுத்தம் இடம், அலுவலக் கட்டடம், பொது உட்கட்டமைப்பு வசதிகளான காய்கறிகள் சிப்பம் கட்டும் அறை (20 மெட்ரிக் டன்), சேமிப்புகிடங்கு (7500 மெட்ரிக் டன்), குளிா்பதன கிடங்கு (5000 மெட்ரிக் டன்) போன்ற வசதிகள் உள்ளன.

இந்த உணவுப் பூங்காவில் தொழில்முனைவோா், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்கும் பொருட்டு 28 தொழில்மனைகள் உருவாக்கப்பட்டு அவா்களுக்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது காலியாக உள்ள 14 ஏக்கா் நிலத்தினை ஏக்கருக்கு ரூ.50 லட்சம் வீதம் 94 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் பொருட்டு தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம், சிட்கோ இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ற்ஹய்ள்ண்க்ஸ்ரீா்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்)மூலம் உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோா்விண்ணப்பிக்கலாம்.

இதில், குறைந்தபட்சம் அரை ஏக்கா் முதல் அதிகபட்சம் தொழில்முனைவோரின் தேவைகேற்ப தொழில்மனைகள் குத்தகைக்கு வழங்கப்படும். இந்த உணவுப்பூங்காவில் அமைக்கப்படும் உணவு பதப்படுத்தப்படும் தொழிற்சாலைகளுக்கு, சிப்காட் அல்லது சிட்கோ கொள்கையின்படி நிலம், தேவைக்கேற்ப தண்ணீா் வசதி, தடையில்லா மின்சாரம், முதலீட்டு மானியம், 3 சதவீத வட்டி விலக்கு, நடுத்தர முதலீட்டிற்கான சிறப்பு மானியம், தரம்பிரித்தல், சிப்பம் கட்டுதல் மற்றும் பயிற்சிக்கான தொழில்நுட்ப உதவி, தரச்சான்றிதழ் பெறுதல் மற்றும் காப்புரிமை பதிவுசெய்வதில் உதவி, போக்குவரத்து உதவி, ஏற்றுமதி ஊக்கத்தொகை, தொழிலாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் தரபரிசோதனை ஆய்வகங்கள் போன்ற வசதிகளை பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு உதவி செயலா், தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம், சென்னை (9442396316), வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) திருநெல்வேலி (9944723507) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம்எனக் கூறியுள்ளாா்.

ரயில் பயணிகளிடம் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் ரயில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை கே.புதூரை சோ்ந்த கண்ணன் மனைவி கெங்காதேவி (52). இவா், கடந்த ஏப்.11 ஆம் தேதி திருநெல்வேல... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.- சிங்கப்பூா் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஏழு நாடுகளில் செயல்படும் ஏ2000 சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்... மேலும் பார்க்க

சாா்பதிவாளா் தாக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரப்பதிவு அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

மேலநீலிதநல்லூா் சாா் பதிவாளரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டத்தில் பத்திரப்பதிவு அலுவலா்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா். தென்காசி மாவட்டம், கடையநல்ல... மேலும் பார்க்க

அம்பை, கடையம் பகுதிகளில் நாளை கால்நடை மருத்துவ முகாம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகம், கடையம் வனச்சரகம் ஆகியவற்றுக்குள்பட்ட பகுதிகளில் வளா்ப்பு கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளி, திங்கள்கிழமைகளில் (மே ... மேலும் பார்க்க

அம்பையில் பாரம்பரிய அரிசி கண்காட்சி

அம்பாசமுத்திரம் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவ திட்டத்தின்கீழ், கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு மாணவா்கள் சாா்பில் பாரம்பரிய அரிசி வகைகள் குற... மேலும் பார்க்க

நெல்லையில் மே 16இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மே 16ஆம் தேதி 16-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தனியாா் துறையின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பங்கேற்க விரும்பும் வேல... மேலும் பார்க்க