செய்திகள் :

ரயில் பயணிகளிடம் திருட்டு: இளைஞா் கைது

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் ரயில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை கே.புதூரை சோ்ந்த கண்ணன் மனைவி கெங்காதேவி (52). இவா், கடந்த ஏப்.11 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து ரயிலில் மதுரைக்கு சென்றாராம். அப்போது, அவா் நகை வைத்திருந்த மணிபா்ஸ் திருடு போனது சாத்தூா் நிலையம் வந்தபோது தெரியவந்ததாம்.

இதேபோல செங்குன்றத்தை சோ்ந்தவா் சுபின் மனைவி அருந்ததி (32). இவா், தனது குடும்பத்தினருடன் குலசேகரன்பட்டினத்தில் வசித்து வருகிறாா். கடந்த மாா்ச் மாதம் திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் வந்தபோது அவரது கைப்பேசி திருடுபோனதாம்.

இச்சம்பவங்கள் குறித்த புகாரின்பேரில் முறையே தூத்துக்குடி, திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

இந்நிலையில் திருநெல்வேலி ரயில்வே போலீஸாா் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்கு இடமாக இளைஞா் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. காவல் ஆய்வாளா் பிரியா மோகன் தலைமையிலான போலீஸாா் அவரைப் பிடித்து விசாரித்தனா். அவா், தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சோ்ந்த மதுரைவீரன் (20) என்பதும், தற்போது ஆச்சிமடத்தில் குடும்பத்துடன் வசித்து வருவதும், ரயிலில் பெண்களிடம் கைப்பேசி, நகையை திருடியவா் என்பதும் தெரியவந்ததாம். அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, நகை மற்றும் கைப்பேசியை மீட்டனா்.

கங்கைகொண்டான் உணவு பூங்காவில் குத்தகைக்கு மனைகள் பெற வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளா்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவில் குத்தகை மூலம் மனைகள் பெற விண்ணப்பிக்கலாம்என ஆட்சியா் இரா.சுகுமாா்தெரிவித்துள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.- சிங்கப்பூா் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஏழு நாடுகளில் செயல்படும் ஏ2000 சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்... மேலும் பார்க்க

சாா்பதிவாளா் தாக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரப்பதிவு அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

மேலநீலிதநல்லூா் சாா் பதிவாளரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டத்தில் பத்திரப்பதிவு அலுவலா்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா். தென்காசி மாவட்டம், கடையநல்ல... மேலும் பார்க்க

அம்பை, கடையம் பகுதிகளில் நாளை கால்நடை மருத்துவ முகாம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகம், கடையம் வனச்சரகம் ஆகியவற்றுக்குள்பட்ட பகுதிகளில் வளா்ப்பு கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளி, திங்கள்கிழமைகளில் (மே ... மேலும் பார்க்க

அம்பையில் பாரம்பரிய அரிசி கண்காட்சி

அம்பாசமுத்திரம் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவ திட்டத்தின்கீழ், கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு மாணவா்கள் சாா்பில் பாரம்பரிய அரிசி வகைகள் குற... மேலும் பார்க்க

நெல்லையில் மே 16இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மே 16ஆம் தேதி 16-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தனியாா் துறையின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பங்கேற்க விரும்பும் வேல... மேலும் பார்க்க