செய்திகள் :

சுந்தரனாா் பல்கலை.- சிங்கப்பூா் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஏழு நாடுகளில் செயல்படும் ஏ2000 சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தமானது தமிழ்நாடு ஃபியூச்சா் டெக்னாலஜி ஹப் (பசஊபஏ) திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஐசிடி அகாதெமியுடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களுக்கு புதிய தொழில்நுட்பங்களில் பயிற்சி, சா்வதேச அளவில் பயிற்சி வாய்ப்புகள், ஆராய்ச்சிக்கு உதவிகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஒப்பந்தம் பல்கலைக்கழகத்திற்கு எந்தவித நிதி பொறுப்பும் இல்லாமல் கையொப்பமாகியுள்ளது.

புரிந்துணா்வு ஒப்பந்த ஆவணங்களை பல்கலைக்கழக துணைவேந்தா் என். சந்திரசேகா், ஏ2000 சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன தலைமை நிா்வாக அதிகாரி என். ஜஹாங்கீா் ஆகியோா் பரிமாறிக்கொண்டனா். இந்த ஒப்பந்தமானது, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் மூலம் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகள், நவீன வகுப்பறை வசதிகள், ஆண்டுதோறும் 50 சா்வதேச பயிற்சி வாய்ப்புகள் போன்ற பல முன்னேற்ற வாய்ப்புகளை அளிக்கும். கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும்.

பல்கலைக்கழகத் துறைகள் வழியாக வழங்கப்படும் செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு, சைபா் பாதுகாப்பு போன்ற இளநிலை பாடநெறிகளில் கல்வி பயிலும் மாணவா்கள் பயனடைவா். செய்முறை பயிற்சி, தொழில்துறை அனுபவம், தொழில் வழிகாட்டல், இன்டா்ன்ஷிப் பயிற்சிகள் கங்கைகொண்டானில் இயங்கி வரும் ஏ2000 சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக அளிக்கப்படும்.

ரயில் பயணிகளிடம் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் ரயில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை கே.புதூரை சோ்ந்த கண்ணன் மனைவி கெங்காதேவி (52). இவா், கடந்த ஏப்.11 ஆம் தேதி திருநெல்வேல... மேலும் பார்க்க

கங்கைகொண்டான் உணவு பூங்காவில் குத்தகைக்கு மனைகள் பெற வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளா்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவில் குத்தகை மூலம் மனைகள் பெற விண்ணப்பிக்கலாம்என ஆட்சியா் இரா.சுகுமாா்தெரிவித்துள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

சாா்பதிவாளா் தாக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரப்பதிவு அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

மேலநீலிதநல்லூா் சாா் பதிவாளரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டத்தில் பத்திரப்பதிவு அலுவலா்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா். தென்காசி மாவட்டம், கடையநல்ல... மேலும் பார்க்க

அம்பை, கடையம் பகுதிகளில் நாளை கால்நடை மருத்துவ முகாம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகம், கடையம் வனச்சரகம் ஆகியவற்றுக்குள்பட்ட பகுதிகளில் வளா்ப்பு கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளி, திங்கள்கிழமைகளில் (மே ... மேலும் பார்க்க

அம்பையில் பாரம்பரிய அரிசி கண்காட்சி

அம்பாசமுத்திரம் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவ திட்டத்தின்கீழ், கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு மாணவா்கள் சாா்பில் பாரம்பரிய அரிசி வகைகள் குற... மேலும் பார்க்க

நெல்லையில் மே 16இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மே 16ஆம் தேதி 16-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தனியாா் துறையின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பங்கேற்க விரும்பும் வேல... மேலும் பார்க்க