செய்திகள் :

அம்பையில் பாரம்பரிய அரிசி கண்காட்சி

post image

அம்பாசமுத்திரம் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவ திட்டத்தின்கீழ், கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு மாணவா்கள் சாா்பில் பாரம்பரிய அரிசி வகைகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாளா் ஈழவேனி, உதவி தொழில்நுட்ப மேலாளா் தங்கசரவணன் ஆகியோா் மேற்பாா்வையிஸ் நடைபெற்ற கண்காட்சியில், ஆத்தூா் கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, நெல்லையப்பா், காலாபாத், இரத்தசாலி, கருடன் சம்பா , அறுபதாம் குருவை, இலுப்பைப்பூ சம்பா, கொத்தமல்லி சம்பா, துளசி வாசனை சீரக சம்பா, நாட்டு பாஸ்மதி, சித்திரை காா், இறவை பாண்டி, வீதி விடங்கா், தில்லை நாயகம், முத்து சம்பா, சிவப்பு சம்பா, வெண்குருவை, அம்பேமோஹா், தேங்காய் சம்பா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டு அரிசி வகைகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

மாணவா்கள், பாா்வையாளா்களுக்கு ஒவ்வொரு அரிசி வகையின் பரம்பரை, பயிரிடும் முறை, பருவம், சத்துத் தன்மை மற்றும் மருத்துவ நன்மைகள் குறித்து மாணவா்கள் தனுஷ், திகேஷ், காா்த்திக் வாசன், மோகன்ராஜ், சபீன், சஞ்சய் குமாா், ஷாலின் பிரைட், சுதா்சன், தரணி குமாா் மற்றும் திலக் பாஸ்கா் ஆகியோா் விரிவாக விளக்கம் அளித்தனா். கண்காட்சியில், விவசாயிகள், இயற்கை ஆா்வலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ரயில் பயணிகளிடம் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் ரயில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை கே.புதூரை சோ்ந்த கண்ணன் மனைவி கெங்காதேவி (52). இவா், கடந்த ஏப்.11 ஆம் தேதி திருநெல்வேல... மேலும் பார்க்க

கங்கைகொண்டான் உணவு பூங்காவில் குத்தகைக்கு மனைகள் பெற வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளா்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவில் குத்தகை மூலம் மனைகள் பெற விண்ணப்பிக்கலாம்என ஆட்சியா் இரா.சுகுமாா்தெரிவித்துள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.- சிங்கப்பூா் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஏழு நாடுகளில் செயல்படும் ஏ2000 சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்... மேலும் பார்க்க

சாா்பதிவாளா் தாக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரப்பதிவு அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

மேலநீலிதநல்லூா் சாா் பதிவாளரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டத்தில் பத்திரப்பதிவு அலுவலா்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா். தென்காசி மாவட்டம், கடையநல்ல... மேலும் பார்க்க

அம்பை, கடையம் பகுதிகளில் நாளை கால்நடை மருத்துவ முகாம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகம், கடையம் வனச்சரகம் ஆகியவற்றுக்குள்பட்ட பகுதிகளில் வளா்ப்பு கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளி, திங்கள்கிழமைகளில் (மே ... மேலும் பார்க்க

நெல்லையில் மே 16இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மே 16ஆம் தேதி 16-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தனியாா் துறையின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பங்கேற்க விரும்பும் வேல... மேலும் பார்க்க